பதிவு செய்த நாள்
05
மே
2014
02:05
பேரம்பாக்கம்: பேரம்பாக்கம் அடுத்த, கூவம் கிராமத்தில் உள்ள, திரிபுரசுந்தரி சமேத திரிபுராந்தக சுவாமி கோவிலில், சித்திரை பெருவிழா, நேற்று முன்தினம் காலை, 8:00 மணிக்கு, கொடியேற்றத்துடன் துவங்கியது. வேத மந்திரங்கள் முழங்க, கோவில் கொடி மரத்தில் சித்திரை பெருவிழா கொடியேற்றப்பட்டது. அதன்பின், சுவாமி அம்பாளுடன் திருவீதி உலா நடந்தது. இதைத் தொடர்ந்து, நேற்று காலை, சுவாமி, அம்பாளுடன் பவழக்கால் சப்பரத்திலும், இரவு, பூத வாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று முன்தினம் துவங்கிய, இந்த சித்திரை பெருவிழாவில், வரும், 9ம் தேதி, தேரோட்டமும், 10ம் தேதி, திருக்கல்யாணமும் நடைபெறு உள்ளது.