Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அத்திபட்டி புதுமாரியம்மன் கோயில் ... குண்டுவெடிப்பு எதிரொலி: ராமேஸ்வரம் கோயிலில் மொபைல் டவர்! குண்டுவெடிப்பு எதிரொலி: ராமேஸ்வரம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மழைவேண்டி...கழுதைகளுக்கு திருமணம்: மழை பெய்ததால் மகிழ்ச்சி!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

06 மே
2014
10:05

மணப்பாறை: மணப்பாறை அருகே மழைவேண்டி கிராமமக்கள் பத்திரிக்கை கொடுத்து, விருந்து வைத்து கழுதைகளுக்கு திருமணம் செய்துவைத்தனர். திருச்சி மாவட்டம், மணப்பாறை தாலுகா வையம்பட்டி அருகே வத்தமணியாரம்பட்டி கிராமம் உள்ளது. இக்கிராமமக்கள் விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ளனர். கடந்த மூன்றாண்டுக்கும் மேலாக மழையின்றி வறட்சி ஏற்பட்டதால், விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டது. கிணறுகளும் தண்ணீர் இன்றி வறண்டன. பல்லாயிரக்கணக்கான தென்னை, மா, கொய்யா, எலுமிச்சை போன்ற பலவகையான மரங்களும் மழையின்றி காய்ந்து விட்டது. கால்நடைகளும் தீவனமின்றி மிக குறைந்த விலைக்கு விற்பனை செய்ததுடன், மக்கள் வேறு தொழில்களுக்கு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டனர். குடிநீருக்கும் பற்றாக்குறை ஏற்பட்டு, குடிநீரையும் காசுகொடுத்து வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

கழுதைக்கு திருமணம் செய்து வைத்தால் மழைபெய்யும் என, முன்னோர் கூறியதை, அடிப்படையாக வைத்து, இப்பகுதி மக்கள் ஒன்று சேர்ந்து, கழுதைகளுக்கு திருமணம் செய்துவைக்க முடிவு செய்தனர். பஞ்சகல்யாணிக்கு திருமணம் செய்ய, பஞ்சகல்யாண அழைப்பிதழ் என்ற பெயரில் பத்திரிக்கை அச்சிட்டு, ஒவ்வொரு வீடு மற்றும் தங்களது உறவினர்களுக்கும் கொடுத்தனர்.திருமணத்துக்கான தங்கத்தாலி, புடவை, வேஷ்டி, துண்டு, மாலை ஆகியவைகளை பொதுமக்கள் ஒன்று சேர்த்து வாங்கி வந்தனர். வத்தமணியாரம்பட்டி விநாயகர் கோவிலில் பந்தல் அமைத்து நேற்று காலை ஆண், பெண் கழுதைகளுக்கு பொதுமக்கள் முன்னிலையில் திருமணம் நடத்தப்பட்டது. திருமணத்தில் பங்கேற்றவர்களுக்கு அறுசுவை விருந்தும் அளித்தனர். நடுப்பட்டி பஞ்சாயத்து தலைவர் கண்ணன், சுப்பிரமணி குருக்கள் உட்பட இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.திருமணத்திற்கு வந்திருந்தவர்கள் அனைவரும் மொய் கொடுத்துச்சென்றனர். திருமணம் முடிந்த சிறிது நேரத்தில் திடீரென மழைபெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம், தமிழகத்தில் நேற்று தொடங்கியது. வரும், 28ம் ... மேலும்
 
temple news
சபரிமலை; ஜனாதிபதி திரவுபதி முர்மு வரும் 18 அல்லது 19 தேதியில் சபரிமலை வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதை ... மேலும்
 
temple news
திருப்பதி;  மே 6 முதல் 8 வரை திருமலையில் ஸ்ரீ பத்மாவதி ஸ்ரீநிவாசலின் பரிணயோத்சவம் பிரமாண்டமாக ... மேலும்
 
temple news
குன்னுார்; குன்னுார் தந்தி மாரியம்மன் கோவில் சித்திரை தேர் திருவிழாவில் நேற்று முளைப்பாரி ஊர்வலம் ... மேலும்
 
பிரான்மலை; பிரான்மலை குயிலமுதாம்பிகை திருக்கொடுங்குன்றநாதர் கோயிலில் திருக்கல்யாணம் நடந்தது.சங்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar