Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கோடை விடுமுறையால் பழநிக்கு ... சிவலோகநாதர் கோவிலில் பிரதோஷ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கண்ணகி கோயில் விழா: நக்சலைட் தடுப்பு போலீசார் ரோந்து!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 மே
2014
02:05

தேனி: கண்ணகி கோயில் சித்ரா பவுர்ணமி விழா, நாளை நடப்பதை தொடர்ந்து, நக்சலைட் தடுப்பு பிரிவு போலீசார், தமிழக - கேரள எல்லையில் ரோந்து பணி மேற்கொண்டு வருகின்றனர். முல்லை பெரியாறு அணை நீர் மட்டத்தை, 142 அடியாக உயர்த்தலாம், என சுப்ரீம் கோர்ட் அளித்துள்ள தீர்ப்பு, கேரளாவின் இடுக்கி மாவட்ட மக்களிடம் அதிருப்தியையும், தேனி மாவட்ட மக்களிடம் சந்தோஷத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் மங்கலதேவி கண்ணகி கோயில் விழா நாளை நடக்கிறது. இவ்விழாவிற்கு, தமிழக பக்தர்கள், கேரள வனப்பகுதி வழியாக தான் செல்ல வேண்டும். இந்நிலையில், விழா பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக நேற்று இடுக்கி, தேனி எஸ்.பி.,க்களும், கலெக்டர்களும் சந்தித்து பேச முடிவு செய்து இருந்தனர். ஆனால், கேரள முதல்வர் உம்மன்சாண்டி தலைமையில், பெரியாறு அணை நீர் மட்டம் உயர்த்தும் பிரச்னை தொடர்பாக, திடீரென அனைத்து கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால், இடுக்கி கலெக்டர், எஸ்.பி.,யால் கண்ணகி கோயில் விழா தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க முடியவில்லை. இந்நிலையில், இரு மாநிலங்கள் சார்பில், வழக்கத்தை விட 2 தரப்பிலும், 3 மடங்கு கூடுதல் போலீசாரை பாதுகாப்பிற்கு நிறுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. தமிழக பக்தர்கள் செல்லும் வனப்பாதையில், 100 மீட்டர் தூரத்திற்கு ஒரு போலீசார் வீதம் நிறுத்தப்படுகின்றனர். கோயிலில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். நக்சலைட்டுகள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, எந்த சதி வேலைகளிலும் ஈடுபட்டு விடக்கூடாது என்பதற்காக, எல்லைபகுதி முழுவதும் நக்சலைட் தடுப்பு போலீசார், கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டு ரோந்து சுற்றி வருகிறார்கள்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நத்தம்: நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பூக்குழி திருவிழா பிப்.23 கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.தென் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா ... மேலும்
 
temple news
அன்னூர்; சென்னையில் துவங்கி 700 கி.மீ., தூரம் பயணித்து, 500 கிராமங்கள் வழியாக அன்னூர் வந்த ஈஷா யோக மைய ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் சேலம் மாவட்டம் இடைப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ... மேலும்
 
temple news
புதுச்சேரி; முதலியார் பேட்டை வன்னிய பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar