சாஸ்திரங்களில் வாஸ்து பார்ப்பதும் ஒன்று. கோயிலை மையமாக வைத்து ராஜாவின் அரண்மனை, குடிமக்கள் வாழும் இடம், வீட்டின் அமைப்பு எல்லாமே வாஸ்து சாஸ்திரத்தின் அடிப்படையில் அந்தக் காலத்தில் அமைக்கப்பட்டன. ஆனால், மரபில் இருந்து முரண்பட்டு, நன்றாக கட்டப்பட்ட வீட்டை இடிக்கச் சொல்வது, வியாபார ரீதியாக வாஸ்து சாஸ்திரத்தை வளைக்க முயல்வது போன்ற செயல்களில் ஈடுபடுவது கூடாது.