நாமக்கல் குடைவரைக் கோயிலில் மூலவராக வீராசனத்தில் உட்கார்ந்த நிலையில் நரசிம்மர் சேவை சாதிக்கிறார். இரணியன் உடலைப் பிளந்த கை என்பதை நிரூபிப்பது போல் மூலவரின் கரம் சிவப்பு நீரோட்டத்துடன் காணப்படுவது, அதை வடித்த சிற்பியின் கைத்திறனுக்குச் சான்றாக விளங்குகிறது.