Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நாகவல்லியம்மன் கோவில் ... அங்காளபரமேஸ்வரி கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாமல்லபுரம் கோவில்களில் மழைநீர் சேகரிப்பு அமைப்பு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஜூன்
2014
02:06

மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில், அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை, கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் சின்னையா திறந்து வைத்தார். தமிழக, இந்துசமய அறநிலையத் துறை கோவில்களில், கோவில் வளாக மழைநீரை, குளங்களில் சேகரிக்க, ஏற்கனவே மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் இருந்தன. காலப்போக்கில்,  இவை போதிய பராமரிப்பின்றி  சீரழிந்தன. இந்நிலையில், பழைய கட்டமைப்புகளை புதுப்பிக்கவும், புதிதாக அமைக்கவும், மாநில அரசு உத்தரவிட்டது. இதையடுத்து, ஒவ்வொரு மண்டலத்திலும், 500 கோவில்களில், இப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. கடந்த 1ம் தேதி, துவங்கிய இப்பணியை, வரும் 30ம் தேதிக்குள் முடிக்க முடிவெடுக்கப்பட்டது.  காஞ்சிபுரம் மாவட்டத்தில், திருவிடந்தை நித்யகல்யாணப் பெருமாள் கோவில், மாமல்லபுரம் ஸ்தலசயனப்பெருமாள், ஸ்ரீ ஆளவந்தார் நாயகர் அறக்கட்டளை வளாகம் ஆகிய பகுதிகளில், இக்கட்டமைப்பு நிறைவேற்றப்பட்டது.

கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் சின்னையா, அவற்றை நேற்று திறந்து வைத்தார். அறநிலையத் துறை கூடுதல் முதன்மைச் செயலர் கண்ணன், ஆணையர் தனபால், திருப்போரூர் எம்.எல்.ஏ., மனோகரன், மாமல்லபுரம் பேரூராட்சித் தலைவர் கோதண்டபாணி உட்பட, பலர் பங்கேற்றனர். தொடர்ந்து, மழைநீர் சேகரிப்பை வலியுறுத்தி, மாமல்லபுரம் கோவிலில் இருந்து, பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்ற பேரணியை அமைச்சர் துவக்கி வைத்தார். இந்த பேரணி, பேரூராட்சியின் முக்கிய வீதிகள் வழியே நடைபெற்றது. இணை ஆணையர் செந்தில் வேலவன் கூறும்போது, “ஒவ்வொரு கோவிலிலும், அதிகபட்சம் 30 ஆயிரம் ரூபாய் மதிப்பில், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்தப்படுகிறது. தொல்லியல் துறை பொறுப்பில் உள்ள கோவில்களில், அத்துறையின் அனுமதி, மேற்பார்வையுடனே, இதை அமைக்கிறோம்,” என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா அக். 22ல் காப்பு ... மேலும்
 
temple news
கும்மிடிப்பூண்டி; கும்மிடிப்பூண்டி பிரசன்ன வெங்கடேச பெருமாள், கருட வாகனத்தில் வீதியுலா சென்று ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை அருகே இடைக்காட்டூரில் உள்ள சித்தர் இடைக்காடர் கோயிலில் நடைபெற்ற ஜெயந்தி ... மேலும்
 
temple news
திருப்பதி; ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்குப் பிறகு வரும் சதுர்த்தி தினம் நகுல சதுர்த்தியாக ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரியில் கூவானை ஐயனார் கோயில் புரவி எடுப்பு திருவிழா நடந்தது.மதுரை மாவட்ட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar