Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மழை வேண்டி.. ஆட்டுக்கல், ... தஞ்சாவூர் பெரிய கோவிலில் பூச்சொரிதல் விழா! தஞ்சாவூர் பெரிய கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
170 ஆண்டுகளாக நால்வருக்கு பூஜை!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

07 ஜூன்
2014
02:06

தேவகோட்டை: 1848ல் தேவகோட்டை மேற்கு எல்கையில் கல்லாம்பிரம்பு காடு இருந்தது. காடாக இருந்ததால்,170 ஆண்டுகளுக்கு முன்பு, முருகப்பச் செட்டியார் என்பவர் அந்த வழியாக செல்வோர் இளைப்பாறி செல்ல கல் மண்டபம் கட்டினார். அந்த மண்டபத்தில் சம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர், மாணிக்க வாசகர் படங்களை வைத்து பூஜை செய்தார். இது தண்ணீர்பந்தல் காட்டுபகுதியில் இருந்ததால் அன்று காட்டு தண்ணீர் பந்தல் என்றழைத்தனர். தமிழடியார்கள் நால்வர் குருபூஜை செய்ததால் நால்வர் மடம் என்றும் கூறி வந்தனர். முருகப்பச் செட்டியாரின் பரம்பரையினர், தொடர்ந்து தண்ணீர்பந்தலை நடத்தி, குருபூஜை செய்து வந்தனர்.பொற்கிழி கவிஞர். அருசோமசுந்தரன்,பழமையான இந்த கல் மண்டபத்தை சீர் செய்து கான்கிரீட் மண்டபம் அமைத்தார். சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி மாதங்களில் நால்வருக்கும் பூஜை நடத்தினார். மேலும் புதிய இளைஞர்களை அழைத்து சிறு சிறு கூட்டங்கள் நடத்தி பேச்சாற்றலை வளர்த்தார்.மடமாக இருந்தால் பிற்காலத்தில் பராமரிப்பதில் சிரமம் ஏற்படலாம் என்று கருதிய அருசோ, நால்வர் மடத்தை நால்வர் கோயிலாக மாற்ற முடிவெடுத்தார். இதற்காக, காசி,கயா, நைமிசார்ண்யம், ஹரித்துவார், ரிஷிகேஷ் பகுதிகளில் இருந்து மண், தீர்த்தம் கொண்டு வந்து பூஜை செய்து, கோயில் திருப்பணி செய்வதில் ஆர்வமுள்ள சோமநாராயணன் செட்டியார் முன்னிலையில் பணிகளை தொடங்கினார். நால்வருக்கும் கற்சிலை அமைத்து கோயில் கட்டினார்.அருசோமசுந்தரன் கூறுகையில்,கோயில்களில் நால்வர் சன்னதி இருக்கலாம். ஆனால் நால்வருக்கென கோயில் தமிழகத்திலேயே இங்கு தான் உள்ளது. மூதாதையரின் பணியை தொடர்ந்து செய்வதிலும், சிறு கூட்டங்கள் நடத்தி பலரை பேச்சாளர்களாக உருவாக்கியதும் பெருமையாக இருக்கிறது. இளைஞர்கள் ஆன்மிகம்,பக்தி, சமூக சிந்தனை வளர இவ்வளாகத்திலேயே நுõலகம்,படிப்பகம் அமைத்துள்ளோம். காசி, திருச்செந்துõர், கன்னியாகுமரி பாதயாத்திரை செல்வோர் வழித்துணையாக கொண்டு செல்லும் வேல் இங்கு வைத்து தினமும் பூஜை செய்யப்படுகிறது,என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்:திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி திருவிழா உச்ச நிகழ்ச்சியாக சுப்பிரமணிய சுவாமி, ... மேலும்
 
temple news
அன்னூர்: அருகம்பாளையம், பால பட்டாபிராமர் கோவிலில் இன்று கும்பாபிஷேகம் நடந்தது.அருகம்பாளையத்தில், ... மேலும்
 
temple news
 சென்னை: கபாலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக திருநட்சத்திர நாளை முன்னிட்டு, பஞ்சமூர்த்திகளுக்கு, 1,008 ... மேலும்
 
temple news
பழநி: பழநி ரெணகாளிஅம்மன் கோயில் ஏப்.30 கும்பாபிஷேக திருவிழா நடைபெற உள்ளதை முன்னிட்டு முகூர்த்த கால் ... மேலும்
 
temple news
 திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் இன்று வார விடுமுறை என்பதால், சுட்டெரிக்கும் வெயிலிலும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar