ஆந்திர மாநிலத்தில் உள்ள இத்தலத்தின் பெருமையை எங்கேயும் காண முடியாது. கருணாமூர்த்தியான எம்பெருமான் நாம சக்கரவர்த்தியான பிரஹல்லாதனுக்கு அருள்பாலித்தவர். இங்கே காணப்படும் இப்பெருமானின் நவ கோலங்கள் உள்ளத்தைக் கொள்ளை கொள்கின்றன. பக்தன் பிரஹலாதனுக்கு அருள் பாலிக்க ஹிரண்யகசிபுவைத் தன் தொடையில் வைத்து வயிற்றைக் கிழித்துக் குடலை உருவி மாலையாகப் போட்டுக் கொண்டவர், ஜுவாலா நரசிம்மர். பின்னர் கோபம் தணிந்து, கையில் பிடிந்த ரத்தக் கறையை அருகில் உள்ள ஓடை நீரில் சுத்தம் செய்துகொள்கிறார், அந்த ஓடையில் அவர் கை வைத்த இடம் என்று சுட்டப்படும் இடம் சென்னிறமாகக் காணப்படுவதைப் பார்க்க முடிகிறது. இந்த இடத்தினை ஒட்டிக் கொஞ்சம் முன்னும் பின்னும் பார்த்தால் ஓடை சாதாரணமாக தெரிகிறது. இந்த அற்புதத்தை இன்றும் காணலாம். இந்த நரசிம்மருக்கப் பானகம் நிவேதனம் செய்தால் கடன் தொல்லை தீரும் என பக்தர்கள் கருதுகிறார்கள். இங்கு தாயாருடன் இருக்கும் பெருமாள் மாலோலன். செஞ்சுலக்ஷ்மி என்ற தாயாரின் அம்சமான ஆதிவாசிப் பெண்ணை மணந்ததால் பெருமாளின் திருநாமம் மாலோலன். இவ்வூரின் பெயரே ஒரு மந்திரம். அஹோபிலம் மஹாபலம் என்று சொன்னால் உடல், மனம் வாக்கு புத்தி ஆகியவற்றுக்கு மஹாசக்தி மாலோலன் மனத்துக்கு இனியன்.