அவலூர்பேட்டை: மேல்மலையனூர் ஒன்றியம் மேட்டு வைலாமூர் கிராமத்தில் ரேணுகாம்பாள் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இதை முன்னிட்டு 11 ம் தேதி அனுக்ஞை மற்றும் மகா பூர்ணாஹூதி, 12 ம்தேதி காலை 8.50 மணிக்கு கும்பாபிஷேக விழாவும் நடந்தது. ஊராட்சி தலைவர் குணசேகரன்,அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் புண்ணியமூர்த்தி, கன்னலம் தலைவர் பாலகிருஷ்ணன், ஒன்றிய கவுன்சிலர் சங்கீதா சரவணகுமார், துணை தலைவர் சாந்திசேகர், முன்னாள் தலைவர் சம்பத், முன்னாள் கவுன்சிலர் குருசாமி, குப்பன் கலந்து கொண்டனர்.