Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மருதமலையில் வைகாசி விசாக விழா! திருத்தணி ஷீரடி சாய்பாபா கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கட்டப்படாத தாயமங்கலம் ராஜகோபுரம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

13 ஜூன்
2014
03:06

இளையான்குடி: தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் , புதிய ராஜகோபுரம் கட்ட அடிக்கல் நாட்டி நான்கு ஆண்டுகளாகியும் , இதுவரை கோபுரம் எழுப்பும் பணியில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. பக்தர்கள் மன வருத்தத்தில் உள்ளனர் . தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் தென் மாவட்டங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது. குழந்தை வரம் வேண்டுபவர்கள், அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் வருகின்றனர் . ஒவ்வொரு ஆண்டும் பங்குனித் திருவிழாவின் போது லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து நேர்த்தி செலுத்துவர் . இந்த கோயிலில் 1935 ல் கட்டப்பட்ட மூன்று நிலை ராஜகோபுரம் உள்ளது.சில ஆண்டுகளுக்கு முன்பு கோயிலை சுற்றி , பிரகார மண்டபங்கள் கட்டப்பட்டது. மேலும் , பக்தர்கள் தங்குவதற்கு பல மண்டபங்கள் கட்டப்பட்டுள்ளதால் , கோயிலின் ராஜகோபுரம் வெளியே தெரிவதில்லை . இதையடுத்து புதிய ராஜகோபுரம் கட்ட வேண்டும் என இப்பகுதி மக்களும் , பக்தர்களும் கோரிக்கை விடுத்தனர். கடந்த 2010 நவம்பரில் , அப்போதைய அறநிலையத்துறை அமைச்சர் பெரியகருப்பனால் புதிய ஏழு நிலை ராஜகோபுரம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. பின் அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. கடந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பொறியியல் கல்லூரியை சேர்ந்த , தொழில் நுட்ப குழுவினர் , புதிய ராஜகோபுரம் கட்டும் இடத்தில் மண் பரிசோதனை செய்தனர் .பின்னர் புதிய ராஜகோபுரத்திற்கு கல்காரம் வரை கட்டுவதற்கு , கல் கொண்டு வரப்பட்டு , கல்லை வடிவமைக்கும் பணி நடந்தது. அந்த பணியும் சில மாதங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இப்பகுதி மக்களும் , கோயிலுக்கு வரும் பக்தர்களும் மனவேதனை அடைந்துள்ளனர் . விரைவில் புதிய ஏழு நிலை ராஜகோபுரம் கட்டப்பட்டு , கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 கோவை: ஆர்.எஸ்.புரம் அன்னபூர்ணேஸ்வரி கோயிலில், தீபாவளி பண்டிகையையொட்டி,  1,008 லட்டுகளால் கருவறை ... மேலும்
 
temple news
 தீபாவளி பண்டியை முன்னிட்டு, கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; தீபாவளியை முன்னிட்டு திருப்பரங்குன்றம், திருநகர், பாண்டியன்நகர் கோயில்களில் ... மேலும்
 
temple news
 திண்டிவனம்: தீபாவளியை முன்னிட்டு, திண்டிவனத்தில் பெண்கள் கேதார கவுரி நோன்பு எடுத்து வழிப்பட்டனர். ... மேலும்
 
temple news
 விழுப்புரம்: விழுப்புரம் மழுக்கரமேந்திய அமைச்சார் அம்மன் கோவிலில் பக்தர்கள் சதுர்தசி நோன்பு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar