செஞ்சி: செஞ்சி அருகே உள்ள செல்லபிராட்டி லலிதா செல்வாம்பிகை அம்மன் கோவிலில் நேற்று முன்தினம் அமாவசையை முன்னிட்டு தில ஹோமம் நடந்தது. காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், சகஸ்ரநாம அர்ச்சனையும் நடந்தது. மாலை 6 மணிக்கு கலச பிரதிஷ்டை செய்தனர். தொடர்ந்து தில ஹோமம் நடந்தது. இரவு 8 மணிக்கு மகா பூர்ணாஹூதி, கலச நீர் கொண்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், மகா புஷ்பாஞ்சலி, சிறப்பு அர்ச்சனையும் நடந்தது. அறங்காவலர் கன்னியப்பன் மற்றும் விழா குழுவினர் கலந்து கொண்டனர். பூஜைகளை ஈஸ்வர சிவன் செய்தார்.