பதிவு செய்த நாள்
28
ஜூன்
2014
12:06
விழுப்புரம்: விழுப்புரம் கைலாசநாதர் கோவில் மகா கும்பாபிஷேகம் வரும் 4ம் தேதி நடக்கிறது.விழுப்புரம் பிரகன்நாயகி சமேத கைலாசநாதர் கோவில் ஜீருணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா, ஜூலை 4ம் தேதி நடக்கிறது. விழாவையொட்டி, வரும் 30ம் தேதி காலை அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம் மற்றும் நவகிரக ஹோமம் நடக்கிறது. மறுநாள் 1ம் தேதி கோ பூஜை, தன பூஜை, புதிய பிம்பங்களுக்கு பிம்ப சுத்தி நடக்கிறது. தொடர்ந்து 2ம் தேதி அங்குரார்ப்பணம், ரக்ஷா பந்தனம், கும்ப அலங்காரம், பூர்ணாஹூதியும், 3ம் தேதி வேதபாராயணம், விசேஷ சாந்தி, யாக சாலை பூஜை, நாடிசந்தனம், தத்வார்ச்சனை நடக்கிறது. இதையடுத்து 4ம் தேதி அதிகாலை 5:00 மணிக்கு யாகசாலை பூஜை, மகா பூர்ணாஹூதி, யாத்ராதானம், சங்கல்பம் நடக்கிறது. காலை 7:30 மணி முதல் 8:15 மணிக்குள் ராஜகோபுரம் மற்றும் விமானங்கள் கும்பாபிஷேகம், காலை 8:25 மணி முதல் 9:00 மணிக்குள் ஸ்ரீகைலாசநாதர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. அமைச்சர்கள் செந்தூர்பாண்டியன், மோகன், எம்.பி.,க்கள் டாக்டர் லட்சுமணன், ராஜேந்திரன், எம்.எல்.ஏ., சி.வி.சண்முகம், மாவட்ட சேர்மன் அலமே<லு வேலு, நகர்மன்ற சேர்மன் பாஸ்கரன் உட்பட பலர் பங்கேற்கின்றனர்.