Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சென்னையில் ஆறாவது இந்து ஆன்மீக ... அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் தேர்திருவிழா! அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவை கோனியம்மன் கோவில் கலசங்கள் ராஜகோபுரத்தில் ஸ்தாபிதம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஜூலை
2014
05:07

கோவை: கோனியம்மன் கோவில் ராஜகோபுரத்தில் ஸ்தாபிப்பதற்காக வேள்வியில் வைக்கப்பட்ட ஒன்பது ராஜகோபுரகலசங்கள் மங்கல இசை ஒழிக்க, வேதங்கள் முழங்க ராஜகோபுரத்தில் ஸ்தாபிதம் செய்யப்பட்டது. கோவையின் காவல் தெய்வமான கோனியம்மன் கோவிலில், ஒன்பது தங்ககலசங்களோடு கூடிய ஏழு நிலை ராஜகோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. கோவையிலுள்ள தங்க நகை தயாரிப்பாளர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இணைந்து, ராஜகோபுரத்தில் வைப்பதற்கான தங்கக்கலசங்களை கோவிலுக்கு சமீபத்தில் வழங்கினர். ராஜகோபுரத்தின் மேற்பகுதியில் ஸ்தாபிக்ககூடிய ஒன்பது கலசங்கள் ஒவ்வொன்றும் நான்கரை அடி உயரத்தையும், ஒன்னரை அடி அகலத்தையும் கொண்டது. இதில் ஆறு அடுக்குகளில் தங்கரேக்குகள் பதிக்கப்பட்டுள்ளது.

Default Image
Next News

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கோனியம்மன் கோவிலில் ஒன்பது கோபுரகலசங்களையும் வைத்து மலர்மாலைகள் அணிவித்து, வேள்வி நடத்தப்பட்டது. வேள்வியில் வேதவிற்பன்னர்கள் வேதங்களை ஒத புனித தீர்த்தம் கோபுரகலசங்களின் மீது ஊற்றினர். அதன் பின்பு அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் தங்க கோபுரகலசங்கள் எழுந்தருளுவிக்கப்பட்டு, கோவிலிலிருந்து கோவை நகர வீதிகளில், வீதிஉலாவாக வந்தது.  ராஜகோபுரத்தின் மேற்பகுதியில் கான்கிரீ்ட் அமைத்து கோபுரக்கலசங்கள் பொருத்த ஏதுவாக அமைக்கப்பட்டிருந்தது.  கிரேன் மூலம் ராஜகோபுரக்கலசங்கள் கோபுரத்தின் கீழ் பகுதியிலிருந்து மேல் பகுதிக்கு எடுத்துச்செல்லப்பட்டது. அங்கு வரிசையாக ஒவ்வொரு கலசமாக ஸ்தாபிதம் செய்யப்பட்டது.  ஒன்பது கலசங்களும் ஸ்தாபிதம் செய்யப்பட்ட உடன். கலசங்களுக்கு மலர் மாலை அணிவித்து, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, கலசங்களுக்கான கண்களை திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் சிவாச்சாரியார்கள் வேதங்களை ஜெபித்தனர். அதன் பின்னர் புனித தீர்த்தம் தௌிக்கப்பட்டு, கோபுரகலசங்களுக்கு மலர்மாலைகள் அணிவிக்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பைரவர் விரதம் அனைத்து அஷ்டமி திதிகளிலும் கொண்டாடப்படுகிறது. அதில் செவ்வாய்க்கிழமை வருகின்ற ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட கோயில்களில் பைரவருக்கு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
கோவை; புரட்டாசி மாதம் கடைசி செவ்வாய் கிழமையை முன்னிட்டு கோவை காட்டூர்  ரங்க கோனார் வீதியில் ... மேலும்
 
temple news
சூலூர்; மழை வேண்டி அரசூர் கிராம மக்கள், மழைச்சோறு எடுத்து கோவில்களில் வழிபட்டனர்.சூலூர் அடுத்த அரசூர் ... மேலும்
 
temple news
கோபால்பட்டி; கோபால்பட்டி அருகே கே.அய்யாபட்டி சிவதாண்டவ பாறை ருத்ரலிங்கேஸ்வரர் கோயிலில் நடந்த மண்டல ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar