பதிவு செய்த நாள்
12
ஜூலை
2014
12:07
செஞ்சி: செஞ்சி பகுதி சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது. செஞ்சி காமாட்சியம்மன் உடனுரை ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் ஏகாம்பரேஸ்வரர், காமாட்சியம்மன், நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர். மாலை 3 மணிக்கு நந்தீஸ்வரருக்கு பால் அபிஷேகம் நடந்தது. பூஜைகளை கிரிசங்கர் குருக்கள் செய்தனர். செஞ்சி அருணாசல ஈஸ்வரர் கோவிலில் அருணாச்சலேஸ்வரர், அபிதகுசாம்பிகை மற்றும் நந்தீஸ்வரரு க்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர். திருப் பணிக் குழு தலைவர் டாக்டர் ரவிச்சந்திரன், உபயதாரர் முருகன் கலந்து கொண்டனர். முக்குணம் முக்குன்ற நாத உடையார் கோவிலில் முக்குன்ற நாதர் மற்றும் நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்தனர். மகா தீபாராதனையும், சுவாமி ÷ காவில் உலாவும் நடந்தது. பிரசாத வினியோகம் நடந்தது. உபயதாரர் தயாளன், ஆதிலட்சுமி, நிர்வாக குழு பச்சைவண்ணன், செல்லக் குட்டி, பழனி, சண்முகம், நாராயணசாமி கலந்து கொண்டனர். மேலச்சேரி பிரகன்நாயகி உடனுறை மத்தளேஸ்வரர் குடைவரை கோவிலில் மத்தளேஸ்வரர், பிரகன் நாயகி, நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்தனர். பூஜைகளை சிவநாதன் குருக்கள் செய்தார். தேவதானம்பேட்டை தண்டாயுதபாணி கோவிலில் பிரேதோஷ வழிபாடு நடந்தது. நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர். பக்தர்கள் அகல் விளக்கேற்றி வழிபட்டனர். பிரசாத வினியோகம் நடந்தது. பூஜைகளை அருட்பெரும் ஜோதி குருக்கள் செய்தார்.