கன்னி: (உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை 1,2) துணிச்சல் பிறக்கும்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14ஜூலை 2014 03:07
கண்ணியத்துடன் செயல்படும் கன்னி ராசி அன்பர்களே!
குரு, சூரியன் ஆகிய இரண்டும் நன்மை தரும் நிலையில் உள்ளன. புதன்ஆக.8 வரையும், அதன் பின் சுக்கிரன் சாதகமான இடத்தில் இருக்கிறார்கள். இதனால் மனதில் துணிச்சல் பிறக்கும். எடுத்த புதுமுயற்சியை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். பணப் புழக்கம் சிறப்பாக இருக்கும். சூரியனால் சமூகத்தில் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். அரசு வகையில் நன்மை காண்பீர்கள். உடல் உபாதை நீங்கி பூரண குணம் உண்டாகும்.குடும்பத்தில் அமைதியும் ஆனந்தமும் தவழும். கணவன், மனைவி இடையே அன்பு நீடிக்கும். பெண்கள் உதவிகரமாக இருப்பர். ஆக. 8 க்கு பிறகு பண வரவு அதிகரிக்கும். செவ்வாயால் சிலர் வீட்டில் பொருள் திருட்டு போகலாம். உடல்நலம் சிறப்பாக இருக்கும்.மருத்துவச் செலவு குறையும். ஆக. 8 க்குப் பிறகு உடல் நலத்தில் அக்கறை காட்டவேண்டியது இருக்கும்.
தொழில், வியாபாரத்தில் சீரான பலனை எதிர்பார்க்கலாம். செவ்வாயால் அரசு வகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை. எனவே வரவு-செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். ஜூலை 23க்கு பிறகு தொழிலில் லாபம் அதிகரிக்கும். கூட்டாளிகளிடையே ஒற்றுமை நீடிக்கும். பணியாளர்கள் சிறப்பான பலன் காண்பர். புதிய பதவி கிடைக்கும். மாத தொடக்கத்தில் நற்பலன் கிடைக்கப் பெறுவர். உங்கள் கோரிக்கைகளை கேட்டு நிறைவேற்றி கொள்ளுங்கள்.
கலைஞர்கள் போட்டி பொறாமையைச் சந்திப்பர். சிலருக்கு அவப்பெயர் கூட உருவாகலாம். ஆக. 8க்கு நிலைமை சீராகும். அதன் பின் புகழ் பாராட்டு கிடைக்க பெறலாம். அரசியல்வாதிகள் சீரான வளர்ச்சி நிலையில் இருப்பர்.
மாணவர்கள் சிறப்பான முன்னேற்றம் காணலாம். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். ஆசிரியரின் ஆலோசனையை ஏற்று நடப்பது நல்லது.
விவசாயிகள் காய்கறி, பழங்கள், கீரை வகைகள், கிழங்கு வகைகள் நல்ல மகசூலைக் காண்பர். புதிய சொத்து வாங்கும் எண்ணம் தள்ளிப் போகும்.
பெண்களால் குடும்பம் சிறக்கும். புத்தாடை அணிகலன் வாங்கி மகிழ்வீர்கள்.
நல்ல நாள்: ஜூலை 17, 18, 24, 25, 26, 27, 28, 31 ஆக.1, 2, 5, 6, 12, 13, 14, 15