Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வேலாயுதம்பாளையம் ஆடி வெள்ளி ... ராமேஸ்வரம் உண்டியல் வசூல் ரூ.31 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அம்மன் கோயில்களில் ஆடிவெள்ளிகூழ் ஊற்றி பக்தர்கள் நேர்த்திக்கடன்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஜூலை
2014
01:07

தேனி:தேனி மாவட்டத்தில் அம்மன் கோயில்களில் ஆடிவெள்ளி சிறப்பு பூஜைகள் நேற்று நடந்தன. காலை முதல் இரவு வரை பெண்கள் கூழ் காய்ச்சி கொடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். நேற்று ஆடி முதல் வெள்ளி அம்மன் கோயில்களில் கொண்டாடப்பட்டது. வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில், தேனி வீரகாளியம்மன் கோயில், அல்லிநகரம் மாரியம்மன் கோயில், தேனி பத்திரகாளியம்மன் கோயில், பெரியகுளம் மாரியம்மன் கோயில், கம்பம் கவுமாரியம்மன் கோயில், கூடலூர் துர்க்கை கோயில் உட்பட அம்மன் கோயில்கள் காலை 5 மணிக்கே நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் நடத்தப்பட்டு அம்மன் அலங்காரம் செய்யப்பட்டது.பெண் பக்தர்கள் அதிகாலையிலேயே, கோயில்களில் கூழ் காய்ச்சினர். தங்களது நேர்த்திக் கடனுக்கு ஏற்ப சிலர் உப்பு போடாமலும், உப்பு போட்டும், வேப்பிலை போட்டும், வெங்காயம், கருவேப்பிலை, பச்சைமிளகாய் போட்டும் கூழ் காய்ச்சினர். அம்மனுக்கு விளக்கேற்றி வழிபட்டனர்.பெரிய பாத்திரங்களில் கூழ் காய்ச்சி, பெரிய பேப்பர் கப்களில் ஊற்றி எல்லோருக்கும் சப்ளை செய்தனர். மதியம் பெரும்பாலான அம்மன் கோயில்கள் திறந்திருந்தன. இதனால் காலை முதல் இரவு வரை கூழ் பக்தர்களுக்கு கொடுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.கூடலூர்: ஆடி வெள்ளியை முன்னிட்டு கூடலூர் கூடல் சுந்தரவேலவர் கோயில் வளாகத்தில் உள்ள மகாலட்சுமி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் ஆராதனை நடந்தது. பெண்கள் அதிக அளவில் அம்மனை தரிசித்தனர். கற்கண்டு சாதம் பிரசாதமாக வழங்கப்பட்டது. பாதயாத்திரை மகளிர் குழுவினர் பஜனை பாடல்கள் பாடினர்.அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் சிறப்பு அபிஷேகம் நடந்தது. அம்மன் சர்வ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதே போல் துர்க்கையம்மன் கோயிலிலும் ஆடிவெள்ளி சிறப்பு பூஜை நடந்தது. பக்தர்களுக்கு கஞ்சி பிரசாதம் வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் பிரம்மோற்சவத்தையொட்டி லட்சுமி ... மேலும்
 
temple news
தஞ்சாவூர் : பழையாறையில் உள்ள சோழர்கள் காலத்திற்குரிய சோமநாதர் கோவிலின் ராஜகோபுரம் சிதலமடைந்த ... மேலும்
 
temple news
அவிநாசி; மஹா சிவராத்திரியை முன்னிட்டு ஆயிரம் கிலோமீட்டர் ஷிவாங்கா பாதயாத்திரை. மஹா சிவராத்திரி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; மாசி மகா சிவராத்திரி விழா யொட்டி இன்று (பிப்., 10) சுவாமி, அம்மன் கெந்தமாதன பர்வதம் ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; கேரளா மாநிலத்தில் உள்ள 29 முக்கிய கோவில்களில், கோவை ஈஷாவில் நடக்கும் மஹா சிவராத்திரி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar