Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வேம்புலி அம்மன் கோயிலில் ... காரைக்காலில் ஜூலை 31-ல் ஸப்த கருட சேவை!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆடிக் கிருத்திகையையொட்டி முருகன் கோயில்களில் சிறப்பு பூஜை!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஜூலை
2014
04:07

வேலூரை அடுத்த ரத்தினகிரியில் உள்ள பாலமுருகன் திருக்கோயிலில் ஆடிக் கிருத்திகையையொட்டி ஞாயிற்றுக்கிழமை முதல் பக்தர்கள் கூட்டம் அலைமோதத் தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் காவடியுடன் வந்தவண்ணம் உள்ளனர்.திங்கள்கிழமை காலை பால்குட சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது.அதையடுத்து மகா தீபாராதனையும் நடைபெறுகிறது. ஆடிக் கிருத்திகையையொட்டி கோயில் வளாகத்தில் இரவு 7 மணியளவில் இன்னிசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.விழா ஏற்பாடுகளை பாலமுருகனடிமை சுவாமிகள், செயல் அலுவலர் பத்மநாபன் ஆகியோர் செய்து வருகின்றனர். வள்ளிமலை முருகன் கோயிலிலும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறவுள்ளன. ஏராளமான பக்தர்கள் திருக்கோயிலுக்கு காவடி எடுத்து வருகின்றனர்.பாலமதி குழந்தை வேலாயுதபாணி திருக்கோயில், புதுவசூர் தீர்த்தகிரி வடிவேல் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், காங்கேயநல்லூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், வேலூர் ஜலகண்டேஸ்வரர் திருக்கோயில், மகாதேவமலை உள்ளிட்டவற்றிலும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் திங்கள்கிழமை நடைபெறவுள்ளன.ரத்தினகிரி, மகாதேவ மலை, வள்ளிமலை ஆகியவற்றுக்கு தமிழ்நாடு அரசு கூடுதல் பஸ்களை இயக்கத்தொடங்கியுள்ளது.காவடி ஊர்வலம்வந்தவாசியில் காவடி ஊர்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.ஆடிக் கிருத்திகையையொட்டி ஆண்டுதோறும் வந்தவாசி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் பலர் திருத்தணிக்கு காவடி எடுத்துச் செல்வர். இவர்கள் வந்தவாசி நகரில் காவடிகளுடன் ஊர்வலமாகச் சென்று, பின்னர் திருத்தணிக்கு பேருந்து உள்ளிட்ட வாகனங்களில் செல்வர்.இந்நிலையில் இந்த ஆண்டு ஆடிக் கிருத்திகையையொட்டி கீழ்வில்லிவலம், மாம்பட்டு, அம்மையப்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் மயில் காவடிகளுடன் வந்தவாசி நகரில் தேரடி, பஜார் வீதி வழியாக ஊர்வலமாகச் சென்றனர். இதையொட்டி போலீஸார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று மாலையில் பிரதமர் மோடி சுவாமி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் 69வது மடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், எட்டாவது வார்ஷிக ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் இன்று நடந்த திருக்கல்யாண வைபவத்தில், திரளான பக்தர்கள் ... மேலும்
 
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு, கடலை ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த திருவெண்காடு கிராமத்தில் தேவாரப் பாடல் பெற்ற பிரம்ம ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar