பதிவு செய்த நாள்
22
ஜூலை
2014
01:07
திருவள்ளூர்: ஆடி கிருத்திகையை முன்னிட்டு, நேற்று, முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.திருவள்ளூர், பஜார் வீதியில் உள்ள திரிபுரசுந்தரி சமேத தீர்த்தீஸ்வரர் கோவிலில் சுப்ரமணியர்சன்னிதியில், ஆடி பரணியை முன்னட்டு, நேற்று முன்தினம், சுப்ரமணியருக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.ஆடி கிருத்திகையை முன்னிட்டு, நேற்று, காலை 9:00 மணிக்கு, சிறப்பு அபிஷேகமும் மாலை, சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் முருகனை வழிபட்டனர்.சிவா -விஷ்ணு கோவில்: திருவள்ளூர், பூங்காநகரில் உள்ள சிவா - விஷ்ணு கோவிலில் உள்ள சுப்ரமணியருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்கள், பால்குடம் எடுத்து வந்து, முருகனுக்கு அபிஷேகம் செய்தனர். மாலை 5:00 மணியளவில், அலங்கரிக்கப்பட்ட தேரில் சுப்ரமணியர் கோவில் வளாகத்தில் வலம் வந்தார்