Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பல்லவர் கால கொற்றவை சிற்பம் ... காளியம்மன் செடல் திருவிழா!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பெருமாளின் கரங்கள் சூரியனை விட பிரகாசமானது!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 ஆக
2014
11:08

உடுமலை : ""நன்மை செய்பவன் எதிரியாக இருந்தாலும் நண்பனாக ஏற்றுக்கொள்வதும், தீயது செய்பவன் நண்பனாக இருந்தாலும் விட்டு விலகுவதுமே, மனித வாழ்வின் உயர்ந்த குணம், என, உடுமலையில் நடந்த ஆன்மிக சொற்பொழிவில், அனந்தபத்மநாபாசாரியார் பேசினார்.உடுமலை ராமகிருஷ்ண பஜனை சபா சார்பில், கடந்த 66 ஆண்டுகளாக, ஆடி மாதத்தில் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. வ.உ.சி., வீதியில் உள்ள ராமய்யர் திருமண மண்டபத்தில், "ஸ்ரீ கரத்தாழ்வார் வைபவம் என்ற தலைப்பில், மூன்று நாட்கள் நடந்த நிகழ்ச்சியில், சொற்பொழி வாளர் அனந்தபத்மநாபாசாரியார் பேசியதாவது: பெருமாளின் கரம், ஆயுதம் இல்லாததையும் ஆயுதமாக மாற்றும் திறன் கொண்டது; நல்லவர்களை காக்கவும், தீயவர்களை அழிக்கும் வல்லமையும் கொண்டது.நன்மை செய்பவன் எதிரியாக இருந்தாலும் நண்பனாக ஏற்றுக்கொள்வதும், தீயது செய்பவன் நண்பனாக இருந்தாலும் விட்டு விலகுவதுமே மனித வாழ்வின் உயர்ந்த குணத்தை வலியுறுத்தவே, பெரு மாள் தன் நண்பனான பேராசை கொண்ட சீமாலிகனுக்கு பாடம் புகட்டினார். பெருமாளின் கரமானது ஆயிரம் சூரியனை முன்நிறுத்தினாலும் அதைவிட வெளிச்சம் தரக்கூடிய சக்தியுடையது. ஒரு நொடியேனும் விட்டு விலகாமல் பெருமாளுடனே இருந்த கரத்தைக்கண்டு ஆண்டாள் பொறாமை கொண்டுள்ளார். அத்தகைய சிறப்புடையது பெருமாளின் கரம். ஆயுதங்களை ஏந்திய கரத்தாழ்வார், தன்னை வழிபடும் பக்தர்களுக்கு துன்பம் வரும் வேளையில், அவர்களை காத்து நிற்கவும் செய்கிறார். இவ்வாறு, அவர் பேசினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; ஆடி மாதம் இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு கோவை பீளமேடு அஷ்டாம்ச  வரத ஸ்ரீ ஆஞ்சநேயர் ... மேலும்
 
temple news
தஞ்சை; ராஜராஜசோழன் மறைவுக்கு பின், அவரது மகன் ராஜேந்திர சோழன், 1014ம் ஆண்டு அரியணை ஏறினார். படை பலத்தின் ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் ஆடிப்பூரத்திருவிழா 9ம் நாளான இன்று காலை ... மேலும்
 
temple news
டேராடூன்:  உத்தரகண்ட் மாநிலம் கௌரிகுண்ட் அருகே உள்ள கேதார்நாத் தாம் பகுதிக்கு மலையேற்றப் பாதை நேற்று ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வீற்றிருக்கும் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar