Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பனிமய மாதா ஆலய தேர் பவனி ... பெருமாளின் கரங்கள் சூரியனை விட ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பல்லவர் கால கொற்றவை சிற்பம் கண்டெடுப்பு!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

06 ஆக
2014
11:08

செஞ்சி : செஞ்சி அருகே, பல்லவர் கால கொற்றவை புடைப்பு சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே, சிங்கவரம் கிராமத்தில் பழமையான குமாரத்தம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் அருகில், தரிசு நிலத்தை பயிர் செய்ய சமன்படுத்தியபோது, புடைப்பு சிற்பம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அதே பகுதியில், சிற்பத்தை நிலை நிறுத்தி, அப்பகுதி மக்கள் வணங்கி வருகின்றனர்.கல்வெட்டு மற்றும் சிற்பங்களை ஆய்வு செய்து வரும், புதுச்சேரி காசியல் கழக நிறுவனர் லெனின், சிற்பத்தை ஆய்வு செய்தார். அவர் கூறியதாவது: சிங்கவரம் கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட புடைப்பு சிற்பம், கொற்றவை சிற்பமாகும். நின்ற நிலையில், இந்த சிற்பத்தில் எட்டு கைகள் உள்ளன. மேல் இரு கைகளில் பிரயோக சக்கரமும், சங்கும் உள்ளது. கீழ் இரு கைகளில், வாள், அடுத்துள்ள கைகளில் வில், அம்பு, இடைப்பட்ட கைகளில் ஒன்றில் மண்டை ஓடும், மற்றொன்று தெளிவாக குறிப்பிடப்படாமலும் உள்ளது. கொற்றவையின் கால் பகுதியில் எருமைத்தலை, பக்கத்திற்கு ஒருவராக அமர்ந்த நிலையில் இரண்டு பக்தர்கள், தலைக்கு மேல் பகுதியில் ஒருபுறம் மான், மறுபுறம் சிங்கம் உள்ளன. சிற்பத்தின் முகம்சிதைந்துள்ளது. கால்களில் சிலம்பும், இடையிலும், மார்பிலும் கச்சும், கழுத்தில் அணிகலன், காதுகளில் தொங்க கரண்ட மகுடத்துடன் சிற்பம் உள்ளது. இது, பல்லவர் காலத்தை சேர்ந்தது.இவ்வாறு, லெனின் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்கால்; உலகப்புகழ் பெற்ற திருநள்ளாறு  சனீஸ்வர பகவான் கோவிலில் ஆடி 2ம் சனிக்கிழமை முன்னிட்டு ... மேலும்
 
temple news
கோவை; ஆடி மாதம் இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு கோவை பீளமேடு அஷ்டாம்ச  வரத ஸ்ரீ ஆஞ்சநேயர் ... மேலும்
 
temple news
தஞ்சை; ராஜராஜசோழன் மறைவுக்கு பின், அவரது மகன் ராஜேந்திர சோழன், 1014ம் ஆண்டு அரியணை ஏறினார். படை பலத்தின் ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் ஆடிப்பூரத்திருவிழா 9ம் நாளான இன்று காலை ... மேலும்
 
temple news
டேராடூன்:  உத்தரகண்ட் மாநிலம் கௌரிகுண்ட் அருகே உள்ள கேதார்நாத் தாம் பகுதிக்கு மலையேற்றப் பாதை நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar