பதிவு செய்த நாள்
14
ஆக
2014
11:08
விருத்தாசலம்: மகா சங்கடஹர சதுர்த்தியையொட்டி, விநாயகர் கோவில்களில், சிறப்பு வழிபாடு நடந்தது. விநாயகர் சதுர்த்திக்கு முந்தைய சங்கடஹர சதுர்த்தியையொட்டி, விருத்தாசலம் விருத்தாம்பிகை, பாலாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் கோவிலில் உள்ள ஆழத்து விநாயகருக்கு நேற்று காலை பால், தயிர், சந்தனம், இளநீர், தேன், பன்னீர் போன்ற பொருட்களால் அபிஷேகம், அருகம்புல் மாலை சாற்றி மகா தீபாராதனை நடந்தது. மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் கோவிலில் சித்தி விநாயகருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. காந்தி நகர் நர்த்தன விநாயகர் சந்தனக்காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். அய்யனார் கோவில் தெரு வழித்துணை விநாயகர், ஆற்றங்கரை விநாயகர், கடலூர் சாலை விஜய விநாயகர், பெரியார் நகர் வினைதீர்த்த சித்தி விநாயகர், செல்வ விநாயகர், ரயில்வே காலனி விநாயகர் கோவில்களிலும் சிறப்பு பூஜை நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.
தொடர்புடைய கோயில்கள் :