பிரம்மனின் கையிலிருக்கும் ஜெப மாலை காலச்சக்கரத்தையும்; கமண்டலமானது, எந்த ஆழ்கடல் நீரிலிருந்து உயிரினங்கள் தோன்றினவோ அந்த நீரையும் குறிக்கும். காலச்சக்கரத்தின் சுழற்சியில் பிரபஞ்சத்தில் அனைத்தும் தோன்றுவதும், பின் மறைவதும், மீண்டும் பிறப்பதுமான நிலைகளையே இவை குறிக்கின்றன.