Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பெரியவர்களிடம் ஆசி பெறுவது எப்படி? பிரதோஷ பூஜை இல்லா கோயில்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
ஆயிரம் பொய் சொல்லி கல்யாணம் பண்ணலாமா?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 மே
2011
05:05

ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு கல்யாணத்தை நடத்தி வைக்கலாம் என்று பொதுவான ஒரு கருத்தை சொல்வார்கள். ஆனால், இப்படி பொய் சொல்லி திருமணம் செய்வது தவறு என்கிறது சாஸ்திரம். அப்படியானால், இந்த கலவடை எப்படி உருவானது? ஆயிரம் பொய் சொல்லி கல்யாணம் பண்ணலாம் என்பதை ஒருவருக்கொருவர் ஏமாற்றி திருமணம் செய்து கொள்ளலாம் என்று பொருள் கொள்ளக்கூடாது. நிச்சயிக்கப்பட்ட திருமணம், கடைசி நேரத்தில் நின்று போகும் பட்சத்தில் அதை நடத்துவதற்கு பொய் சொல்லலாம் என்று சாஸ்திரம் அனுமதி தந்திருக்கிறது. ஒரு இல்லத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, மணமேடையும் அமைந்தாயிற்று. அப்போது ஏதோ ஒரு பிரச்சனை எழுகிறது. இரு வீட்டாரும் தகராறு செய்துகொள்கின்றனர். திருமணம் நின்றுவிடுமோ என்ற சூழ்நிலை... இந்த சூழ்நிலையில் அந்த திருமணத்தை ஏதாவது ஒரு பொய்சொல்லி நடத்த சாஸ்திரம் சம்மதிக்கிறது. அவ்வாறு பொய் சொன்னால் அது  பொய் ஆகாது. அதற்குரிய தண்டனையும் கிடைக்காது. ஒரு குடும்பத்தை நிர்வாகம் செய்யும் போது சில நன்மைகள் கருதியும்  பொய் சொல்லலாம்.  சீதாதேவியே ஒரு முறை பொய்சொல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. ஆஞ்சநேயர் அசோக வனத்தை அழித்தார். அப்போது அங்கிருந்த ராட்சஷிகள் சீதையிடம், அந்த குரங்கு எங்கிருந்து வந்ததென உனக்கு தெரியுமா? உன்னிடம் பேசிக் கொண்டிருந்ததாக சொல்கிறார்களே என கேட்டதற்கு, யாரென்றே எனக்க தெரியாது. ஒரு வேளை இந்த வனத்தை அழித்தால் உங்கள் அசுர கூட்டத்தை சேர்ந்ததாக இருக்குமோ என நான் எண்ணியிருந்தேன், என பொய் சொல்லி ஆஞ்சநேயரை காப்பாற்றி விட்டாள். எனவே அவசியமான நேரத்தில் ஒருவரை காப்பாற்ற மட்டுமே பொய் சொல்லலாம். திருமணம் நடக்கும் முன்பே பொய் சொல்வதை தவிர்க்க வேண்டும். ஏனெனில், அது பிற்காலத்தில் பிரச்சனைகளைத் தான் உருவாக்கும்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
temple news
தமிழ் மாதப்பிறப்பு, திருவோணம், ஏகாதசி நாளில் படிப்பது ... மேலும்
 
temple news
உங்கள் உழைப்பை கொடுங்கள். அதுவே ... மேலும்
 
temple news
புறப்படும் முன் செவ்வாய்க்கு அதிபதியான முருகப்பெருமானை ... மேலும்
 
temple news
வடக்கும், கிழக்கும் இணையும் இடம் ஈசான்ய மூலை. இதுவே ... மேலும்
 
temple news
உங்கள் நட்சத்திரத்தில் இருந்து 1, 5, 9, 11வது நட்சத்திரம் வரும் நாளில் செயலைத் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar