பதிவு செய்த நாள்
01
செப்
2014
11:09
புதுச்சேரி: புதுச்சேரியில், விநாயகர் சதுர்த்தி பூஜைகள் முடிந்து, மூன்றாம் நாளான நேற்று விநாயகர் சிலைகள் கடலில் விஜர்சனம் செய்யப்பட்டன. விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 29ம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. புதுச்சேரி நகர் மற்றும் கிராம பகுதிகளில் பல இட ங்களில் பெரிய அளவிலான விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து, பூஜைகள் நடத்தப்பட்டன. வீடுகளில் சிறிய அளவில் சிலைகள் வாங்கி வழிப் பட்டனர். மூன்று நாட்கள் பூஜைக்கு பின், நேற்று காலை வீடுகளில் வைத்து வழிபட்ட சிறிய அளவிலான விநாயகர் சிலைகளை, பீச் ரோடு கடற்கரை பகுதிக்கு பொதுமக்கள் எடுத்து வந்து, தீபாரதனை காண்பித்து, கடலில் விஜர்சனம் செய்தனர். அதேபோன்று, பெரிய அளவிலான விநாயகர் சி லைகள், மேல தாளத்துடன் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, மரக்காணம் அருகே கைக்காணிக்குப்பம், எக்கியார்குப்பம், புதுச்சேரி அருகில் உள்ள தந்திராயன்குப்பம் ஆகிய பகுதிகளில் கடலில் விஜர்சனம் செய்யப்பட்டன. விநாயகர் சிலை ஊர்வலத்தையொட்டி, புதுச்சேரியில் ஆங்காங்கே போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.