திருத்தணி : திருத்தணி அக்கைய்யா நாயுடு சாலையில் உள்ள தணிகாசலம்மன் மற்றும் மடம் கிராமத்தில் உள்ள படவேட்டம்மன் ஆகிய கோவில்களில், நேற்று ஆடித்திருவிழா நடந்தது. இதையொட்டி, காலை, 9:00 மணிக்கு, கூழ் வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. காலை, 10:00 மணிக்கு, மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.பின்னர் திரளான பெண்கள் பொங்கல் வைத்து, அம்மனுக்கு படைத்து வழிப்பட்டனர். இரவு, உற்சவர் அம்மன் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.