Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
காசிவிஸ்வநாதர் கோயிலில் புதிய ... விநாயகர் சிலைகள் கடலூர் சில்வர் பீச்சில் விஜர்சனம்! விநாயகர் சிலைகள் கடலூர் சில்வர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சென்னை விநாயகர் சிலைகள் ஊர்வலம்; பாதுகாப்பில் 18 ஆயிரம் போலீசார்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 செப்
2014
12:09

சென்னை : வரும் 6 மற்றும் 7ம் தேதிகளில் நடக்க உள்ள, விநாயகர் சதுர்த்தி ஊர்வல பாதுகாப்பில், 18 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என, போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் தெரிவித்தார். நேற்று, பத்திரிகையாளர்கள்சந்திப்பில், போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் அளித்த பேட்டி: சென்னையில் வைக்கப்பட்டு உள்ள, 1,600 விநாயகர் சிலைகளுக்கும், தலா ஒரு போலீஸ்காரர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார். வரும், ௬ மற்றும் ௭ம் தேதிகளில் நடக்க உள்ள விநாயகர் சிலை ஊர்வல பாதைகளில், ஏதாவது அசம்பாவிதங்கள் ஏற்பட்டால், அந்த இடங்களுக்கு, ஐந்து நிமிடங்களில், ரோந்து வாகனம் செல்லும் வகையில், திட்டம் வகுக்கப்பட்டு உள்ளது. ரோந்து வாகனங்களில், 200 கண்காணிப்பு கேமராக்கள், முதல்வர் உத்தரவின்பேரில் பொருத்தப்பட உள்ளன. மேலும், பதற்றமானவை என, அறியப்பட்டுள்ள, இடங்களில், 10 கேமராக்கள் மூலம் உயர் போலீஸ் அதிகாரிகள் கண்காணித்து, வேண்டிய உத்தரவுகளை பிறப்பிப்பர். ரோந்து வாகன போலீசாருக்கு, மூன்று ஷிப்ட் முறையில், எட்டு மணி நேர பணி என, வரையறுக்கப்பட்டுள்ளதால், இந்த திட்டம், சட்டம் - ஒழுங்கு பராமரிப்பு மற்றும் போக்குவரத்து மேலாண்மைக்கு தக்க பலன் அளிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஊர்வல பாதுகாப்புக்கு என, 18 ஆயிரம் போலீசார் குவிக்கப்படவுள்ளனர். முதற்கட்டமாக, வண்ணாரப்பேட்டை, எழும்பூர், திருவல்லிக்கேணி, கோடம்பாக்கம், கே.கே.நகர், சேலையூர், தாம்பரம், வேளச்சேரி பகுதிகள் பதற்றமானவை என, அறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் பாதுகாப்புக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஏகாதசி விரதம் விஷ்ணு வழிபாட்டிற்கான முக்கியமான விரதமாகும்.. இன்றைய ஏகாதசி வருதினி ஏகாதசி என ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வையாவூரில் உள்ள சோமேஸ்வரர் கோவில் உழவார பணியின்போது, முருகன் உட்பட மூன்று ... மேலும்
 
temple news
சோழவந்தான்: தென்கரை மூலநாத சுவாமி கோயிலில் கொடிமரம் பாலஸ்தாபனம் நடந்தது.இங்கு சில நாட்களுக்கு முன்பு ... மேலும்
 
temple news
பழநி: பழநி கோயில் செல்ல பயன்பட்டு வரும் ரோப் கார் சேவை மாதாந்திர பராமரிப்பு பணிக்காக ஏப்.16ல் ... மேலும்
 
temple news
விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த கோலியனுாரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீபூமி, நிலா தாயார்கள் சமேத வரதராஜ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar