சேத்தியாத்தோப்பு அடுத்த அகர ஆலம்பாடி பால விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. சேத்தியாத்தோப்பு அடுத்த அகர ஆலம்பாடியில் பால விநாயகர் கோவில் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடத்த திருப்பணிக் குழுவினரால் முடிவு செய்யப்பட்டது. அதன்படி விழா கடந்த 13 ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து 14ம் காலை இரண்டாம் காலயாகசாலை பூஜை, விசேஷ ஹோமம், நாடி சந் தானம், பூர்ணாகுதி, மகா தீபாராதனை நடந்தது. பின்னர் கோ பூஜை, கடம் புறப்பாடாகி 8:30 மணிக்கு விமான கும்பாபிஷேகமும், பின்னர் பாலவிநாயகர் மஹா கும்பாபிஷேகமும் நடந்தது. பூஜை நேரங்களில் வேத பாராயணமும், தேவார பாராயணமும் நடந்தது. கும்பாபிஷேக விழாவை வெங்கடேச தீட்சிதர் நடத்தினார். ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் விழாக் குழுவினர் ஊராட்சித் தலைவர் மதியழகன் செய்திருந்தனர். பல்வேறு அமைப்புகள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. சேத்தியாத்தோப்பு இன்ஸ்பெக்டர் அம்பேத்கர், சப் இன்ஸ்பெக்டர் கணபதி மற்றும் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.