கரூர் மாவட்டம் சின்னதாராபுரம் அருகிலுள்ள திருமங்கலம் கிராமத்தில் அருங்கரை அம்மன் கோயில் உள்ளது. அம்மன் கோயிலாக இருந்தாலும், அம்மனே இங்கு இல்லை. ராகு, கேதுவுடன் விநாயகரும், காவல் தெய்வங்களும் மட்டுமே உள்ளனர். அது மட்டுமன்றி இங்கு பெண்களையும் அனுமதிப்பதில்லை. பெண் குழந்தைகள் கூட உள்ளே செல்ல முடியாது. வெளியில் நின்று தான் வணங்க வேண்டும். ஆண்கள் மட்டுமே வணங்கும் கோயில் இது.