Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இன்றைய சிறப்பு! பெருமாள் கோயில்களில் புரட்டாசி சனி சிறப்பு வழிபாடு! பெருமாள் கோயில்களில் புரட்டாசி சனி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நவராத்திரி நான்காம் (செப்.28)நாள்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

27 செப்
2014
02:09

நவராத்திரியின் நான்காம் நாளில், அம்பாளை மகாலட்சுமியாக வழிபாடு செய்ய வேண்டும். கையில் செந்தாமரை மலர்களை ஏந்தியவளாக அபய, வரத ஹஸ்தம் கொண்டவளாக அலங்கரிக்க வேண்டும். கஸ்துாரி மஞ்சள், முத்து மாலைஅணிவித்து அட்சதை, பிச்சி, முல்லை மலர்களால் அர்ச்சிக்க வேண்டும். பைரவி ராகத்தில் கீர்த்தனை பாடினால் செல்வ வளம் பெருகும்.

மதுரை மீனாட்சி நாளை முருகனுக்கு வேல் வழங்கும் திருக்கோலத்தில் காட்சி அளிக்கிறாள். சூரபத்மனின் கொடுமையைத் தாங்க முடியாத தேவர்கள் சிவனிடம் முறையிட்டனர். சிவன் தன் நெற்றிக் கண்ணைத் திறந்து ஆறு தீப்பொறிகளை வெளியிட்டார். அவை சரவணப்பொய்கையில் சேர்ந்து ஆறு குழந்தைகள் ஆனது. கார்த்திகைப்பெண்கள் அவர்களை வளர்க்க, பார்வதி அவர்களை ஒருவராக்கி ’கந்தன்’ எனப் பெயரிட்டாள். பின் தன் ஆற்றலை ஒன்று திரட்டி வேலாயுதமாக்கி, முருகனுக்கு கொடுத்து சூரனை வென்று வெற்றிவேல் முருகனாக திகழும்படி வாழ்த்தினாள். அந்த கோலத்தில் நாளை காட்சி தரும் மீனாட்சியை நாமும் தரிசிப்போம். இந்தக் காட்சியைத் தரிசிப்போர் எல்லா செயல்களிலும் வெல்வர்.

நைவேத்யம் : தயிர்ச்சாதம்

பாடல்
கண்களிக்கும்படி கண்டு கொண்டேன் கடம்பாடவியில்
பண்களிக்கும் குரல் வீணையும் கையும் பயோதரமும்
மண்களிக்கும் பச்சை வண்ணும் ஆகி மதங்கர்குலப்
பெண்களில் தோன்றிய எம்பெருமாட்டி தன் பேரழகே.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இன்று புனித நீராடி வழிபட அறியாமல் செய்த பாவங்களுக்கு விமோசனம்  கிடைக்கும்.மாசி மாதம் முழுவதுமே ... மேலும்
 
temple news
சூரியன், பூமி, சந்திரன் ஆகிய மூன்றும், ஒரே நேர்கோட்டில் வரும் போது, பூமியின் நிழல் சந்திரன் மீது ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மாசி மகம் பௌர்ணமி திதியும் மகம் நட்சத்திரமும் இணையும் ஒரு புண்ணிய நாளாகும். மாசி ... மேலும்
 
temple news
ஈரான் இஸ்ரேல் போரில் பொது மக்கள் பாதிக்காமல் இருக்க கோளறு பதிகம் மற்றும் நெடுங்காலம் பதிகம் ஆகிவற்றை ... மேலும்
 
temple news
சேத்தியாத்தோப்பு: திருக்கூடலையாற்றுார் நர்த்தனவல்லபேஸ்வரர் கோவிலில் மாசிமக தேரோட்டம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar