பதிவு செய்த நாள்
04
அக்
2014
02:10
காரிமங்கலம்: காரிமங்கலம் லட்சுமி நாராயணா ஸ்வாமி கோவிலில், புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு, சிறப்பு பூஜை இன்று நடக்கிறது. காரிமங்கலம் அக்ரஹாரம் லட்சுமி நாராயணா ஸ்வாமி கோவிலில், புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு, இன்று அதிகாலை, 5 மணிக்கு ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடக்கிறது. ஏற்பாடுகளை, விழாக்குழு தலைவர் எம்.எல்.ஏ., அன்பழகன், குருக்கள் மோகன்குமார் மற்றும் பக்தர்கள் செய்துள்ளனர்.
* காரிமங்கலம் யூனியன் பிக்கனஅள்ளி மலை மீது அமைந்துள்ள ஸ்ரீதேவி பூதேவி சமேத சென்னகேசவ பெருமாள் கோவிலில், புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு, இன்று காலை ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடக்கிறது.
* கோவிலூர் சென்னகேசவ பெருமாள் கோவிலில், ஸ்வாமிக்கு புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமை முன்னிட்டு, இன்று காலை சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடக்கிறது.
* தர்மபுரி, கோட்டை பரவாசுதேவர் கோவிலில், புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு ஸ்வாமிக்கு, அதிகாலை சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடக்கிறது.
* தர்மபுரி வெங்கட்ரமண ஸ்வாமி கோவில், மணியாம்பாடி வெங்கட்ரமண ஸ்வாமி கோவில், காவேரிப்பட்டணம் கோவிந்தசெட்டி தெருவில் பிரசன்ன வெங்கட்ரமண ஸ்வாமி கோவில், கெரகோடஅள்ளி வீரதீர ஆஞ்சநேயர் கோவில், பாலக்கோடு ரோடு ஏரிக்கரை ஆஞ்சநேயர் கோவில், மணிக்கட்டியூர் ஆஞ்சநேயர் கோவில், எஸ்.வி.,ரோடு ஆஞ்சநேயர் கோவில், தாச ஆஞ்சநேயர் கோவில், தொப்பூர் மன்றோ கணவாய் ஆஞ்சநேயர் கோவில், முத்தம்பட்டி ஆஞ்சநேயர் கோவில் உட்பட அனைத்து பெருமாள் மற்றும் ஆஞ்சநேயர் கோவில்களில், புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு, இன்று சிறப்பு அபிஷேகம், பூஜைகளும் நடக்கிறது.