புறம் சொல்வது என்பது கடுமையான பாவம். விபச்சாரம் செய்யும் மனிதன் கூட பாவமன்னிப்பு கோரினால், அவனது மன்னிப்பை அல்லாஹ் ஏற்றுக்கொள்கிறான். ஆனால்,புறம்பேசுபவனை, அவன் யாரைப் பற்றி புறம் பேசினானோ, அவன் மன்னிக்காதவரை இறைவன் மன்னிப்பதில்லை, என்கிறார்கள் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள்.புறம்பேசி பாவத்தை சம்பாதித்தவர்களுக்கு, அதற்கான தண்டனையில் இருந்து விடுபட ஒரே ஒரு பிராயச்சித்தம் தான் இருக்கிறது.நீ எவரைப் பற்றி புறம் பேசினாயோ, அவருடைய பாவங்கள் மன்னிக்கப்பட வேண்டுமென்று,இறைவனிடம் நீ இறைஞ்சுவது புறம் பேசியதற்கான பிராயச்சித்தங்களில் ஒன்றாகும்.அது, இறைவா! புறம் பேசியதற்காக நீ என்னையும் மன்னிப்பாயாக என்று இறைஞ்சுவதாகும்,என்கிறார்கள் அண்ணலார். யாரையாவது பற்றி ஒருவர் புறம் பேசுகிறார்.அவரிடமே நேரில் மன்னிப்பு கேட்க வேண்டுமென நினைக்கிறார். ஆனால், அவர் அந்த ஊரை விட்டுப் போய்விட்டிருக்கலாம். அத்தகைய நேரத்தில் இறைவனிடம் இறைஞ்சுவதன் மூலமும் பாவமன்னிப்பு கிடைக்கும்.