தேய்பிறை சதுர்த்தசி நாளை சிவராத்திரியாகக் கொண்டாடுகிறோம். மாசி மாதத்தில் மகாசிவராத்திரி வந்தாலும், மற்ற மாதங்களிலும் இதே நாளில் மாத சிவராத்திரியும் வருகிறது. ஐப்பசி மாத தேய்பிறை சதுர்த்தசி இரவில் விழித்திருந்த கிருஷ்ணர், அதிகாலை வேளையில் நரகாசுரனைக் கொன்றார். நரகாசுரன் கொல்லப்பட்ட சதுர்த்தசி என்பதால் இந்நாளை நரக சதுர்த்தசி என்று சொல்வர். சிவராத்திரி சிவனுக்கு உரியதாக இருந்தாலும், நரக சதுர்த்தசியான தீபாவளி, பெருமாளுக்கும் உரியதாகி விட்டது. எனவே தீபாவளியன்று சிவன், பெருமாள் இருவரையும் வழிபடுவது நல்லது.