Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருத்தணி முருகன் கோவிலில் ... வள்ளலார் கோட்டத்தில் அதிசயம்: 1,000 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தீபாவளி கொண்டாடாத ஏலகிரி மலை கிராமங்கள்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 அக்
2014
01:10

வேலூர் :பரம்பரை பரம்பரையாக தீபாவளியை, ஏலகிரியை சேர்ந்த பொதுமக்கள் கொண்டாடாமல் தவிர்த்து வருகின்றனர்.வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் அருகே ஏலகிரி மலை, கடல் மட்டத்தில் இருந்து, 1,410 மீட்டர் உயரத்தில் உள்ளது. இந்த மலையில், நிலாவூர், அத்னாவூர், மங்கலம், கொட்டையூர், என, 14 கிராமங்கள் உள்ளது. 14 கொண்டை ஊசி வளைவுகளை கடந்துதான், ஏலகிரி மலைக்கு செல்ல வேண்டும். நாடு முழுவதும் நேற்று முன்தினம், தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. நேற்று, தீபாவளி நோன்பு எடுத்தனர். ஆனால், ஏலகிரி மலையில், தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவில்லை. இதுகுறித்து, ஏலகிரி மலை ஊராட்சி மன்ற தலைவர் அச்சுதன் கூறுகையில்,""விவசாயத்தை முழுவதும் நம்பி வாழும் நாங்கள், தை பொங்கல் பண்டிகையைத்தான் கொண்டாடுகிறோம். இங்கு பரம்பரையாக யாரும் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதில்லை, என்றார்.ஏலகிரி மலை தங்கும் விடுதி சங்க தலைவர் குமார் கூறியதாவது:இந்த மலைப் பகுதியில் தீபாவளியை யாரும் கொண்டாடுவதில்லை. தீபாவளி என்று இங்குள்ள சிறுவர்களை கேட்டால், அவர்களுக்கு என்னவென்றே தெரியாது. பாடப்புத்தகத்தில் வேண்டுமானால் படித்திருக்கலாம். இந்த மலையில் வாழும் அனைத்து மக்களும் விவசாயத்தை நம்பி வாழ்பவர்கள்.மா, பலா, வாழை விளைவிக்கின்றனர். ஆடு, மாடுகளை வளர்க்கின்றனர். 50 ஆண்டுகளுக்கு மேலாக இங்கு யாரும் தீபாவளி கொண்டாடவில்லை. எந்த பலகாரங்களையும், அன்று செய்ய மாட்டார்கள். புதுமணத் தம்பதிகள் தலை தீபாவளியை கொண்டாட மாட்டார்கள். வெளியூர்களில் திருமணம் செய்து கொடுத்த பெண்ணுக்கு தலை தீபாவளிக்காக சீர் வரிசை பொருட்களை, கொண்டு போய் கொடுத்ததில்லை. பொங்கல் பண்டிகையை தான் கொண்டாடி வருகிறோம், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு; கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள புகழ்பெற்ற புத்தூர் திருபுராய்க்கல் பகவதி அம்மன் கோவில் ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் ஸ்ரீமுத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா நிறைவு ... மேலும்
 
temple news
திருச்சி; பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமான திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவிலில் பங்குனி ... மேலும்
 
temple news
வாலாஜாபாத்: நாய்க்கன்குப்பம், பொன்னியம்மன் கோவிலில் ஊஞ்சல் உத்சவம் விமரிசையாக நடந்தது.வாலாஜாபாத் ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: கணவர் இறந்தவுடன் உடன்கட்டை ஏறி உயிர் நீத்த மனைவி மற்றும் கணவரின் நினைவாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar