Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருமலைக்கேணி சுப்பிரமணியசுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நடனபாதேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் : பக்தர்கள் கோரிக்கை
எழுத்தின் அளவு:
நடனபாதேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் : பக்தர்கள் கோரிக்கை

பதிவு செய்த நாள்

09 நவ
2025
01:11

நெல்லிக்குப்பம்: நடனபாதேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்தை விரைந்து நடத்த கோரிக்கை எழுந்துள்ளது.


நெல்லிக்குப்பம், திருக்கண்டேஸ்வரத்தில், 1400 ஆண்டுகள் பழமையான ஹஸ்ததாளாம்பிகை உடனுறை நடனபாதேஸ்வரர் கோவில் உள்ளது.


இக்கோவிலில் ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன் காலத்தில் திருப்பணிகள் நடந்ததற்கான கல்வெட்டுகள் உள்ளன.


அதேபோல் நாயன்மார்களால் பாடல் பெற்ற கோவில் என்பதற்கான கல்வெட்டுகளும் கோவில் வளாகத்தில் இடம் பெற்றுள்ளன. இங்கு பைரவருக்கு தனி சன்னதி உள்ளது.


அறநிலையத்துறை கட்டுபாட்டில் உள்ள இக்கோவில் வளாகத்திலேயே பெரிய குளம் உள்ளது. இதில் ஆனி மாத பிரம்மோற்சவத்தின் போது தெப்ப உற்சவம் நடக்கும். இக்கோவில் கும்பாபிஷேகம், கடந்த 19 ஆண்டுகளுக்கு முன் நடந்தது. அதற்கு பிறகு நடைபெறவில்லை. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடத்த வேண்டுமென்பது ஆகம விதி. இதற்காக திருப்பணிகள் செய்ய ரூ. 41 லட்சமும்,தேர் செய்ய ரூ.43 லட்சமும் அறநிலையத்துறை ஒதுக்கியது.


இதில் தேர் செய்யும் பணிகள் முடிந்து வெள்ளோட்டமும் நடத்தினர். கும்பாபிஷேகம் செய்வதற்காக திருப்பணிகளை கடந்த, 2 ஆண்டுகளுக்கு முன் துவக்கினர். கோவில் கோபுரங்கள் பணி முடிந்து ‘பெயிண்டிங்’ வேலையும் முடிந்தது. அப்போது தான் கோவிலின் மகா மண்டபத்தில் கருங்கல் துாண்களில் விரிசல் இருப்பதை பார்த்தனர்.


பழமையான கோவில் என்பதால் தொல்லியல் துறையில் அனுமதி பெற்றே, மகா மண்டபத்தை பழமை மாறாமல் புதுப்பிக்க வேண்டும்.


இதற்கான அனுமதி கிடைக்க கால தாமதமானதால், அந்த பணியை செய்ய முடியவில்லை. தற்போது தான் அதற்கான அனுமதி கிடைத்துள்ளது.


இக்கோவிலுக்கு சொந்தமாக 30 ஏக்கர் நிலம் இருந்தும் திருப்பணியை முடிக்காமல் காலம் தாழ்த்துவதாக பக்தர்கள் தெரிவித்துள்ளனர்.


இது குறித்து உடனடியாக அறநிலையத்துறை அதிகாரிகள், மகா மண்டபம் பணியை முடித்து கும்பாபிஷேகம் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நத்தம்: திருமலைக்கேணி சுப்பிரமணியசுவாமி கோயில் விநாயகர் சன்னதியில் சங்கடஹர சதுர்த்தி விழா ... மேலும்
 
temple news
கம்பம்: கம்பம் அருகே உள்ள நாராயணத்தேவன்பட்டி கவுமாரியம்மன் கோயில் திருப்பணிகளை, எம்.பி. தங்க ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் 7 நாட்கள் நடக்கும் ஐப்பசி ஊஞ்சல் உற்சவம் ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; மயிலாடுதுறையில் நடந்த தருமபுரம் ஆதினத்தின் 60வது மணிவிழாவை முன்னிட்டு, ஈஷா காவேரி ... மேலும்
 
temple news
 துாத்துக்குடி: திருச்செந்துார் கோவில் கடற்கரை பகுதியில் இரவில் பக்தர்கள் தங்க தடை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar