Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிவன்மலை கோவிலில் சூரனை வதம் செய்த ... வைத்தீஸ்வரன்கோயிலில் சூரசம்ஹார விழா! வைத்தீஸ்வரன்கோயிலில் சூரசம்ஹார ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பொள்ளாச்சி கந்த சஷ்டி விழா: சூரனை வதம் செய்த கந்தன்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

30 அக்
2014
02:10

பொள்ளாச்சி : பொள்ளாச்சி சுப்பிரமணிய சுவாமி கோவிலில், கந்த சஷ்டி சூரசம்ஹாரத்திருவிழா நேற்று நடந்தது. பொள்ளாச்சி சுப்பிரமணிய சுவாமி கோவிலில், கந்த சஷ்டி சூரசம்ஹாரத்திருவிழா கடந்த 24ம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தினசரி நான்கு கால அபிேஷக ஆராதனைகள் நடந்தன. தொடர்ந்து, நேற்றுமுன்தினம் மாலை 6:00 மணிக்கு வேல்வாங்கும் உற்சவமும்; நேற்று மாலை 3:00 மணி முதல் பேரூர் ஆதீனம் இளைய பட்டம் மருதாசல அடிகள் முன்னிலையில், சூரசம்ஹார நிகழ்ச்சியும் நடந்தது. சுப்ரமணிய சுவாமி கோவிலில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு கிழக்கு எஸ்.எஸ்., கோவில் வீதி வழியாக சென்றது.

சத்திரம் வீதி, தெப்பக்குளம் வீதி சந்திப்பு பகுதியில், தாரகன் வதையும்; தெப்பக்குளம் வீதியும், வெங்கட்ரமணன் வீதியும் சந்திப்பு பகுதியில் இரண்டாவது சூரன் சிங்கமுகன் வதையும், வெங்கட்ரமணன் வீதியும், ராஜாமில் ரோடும் சந்திப்பு பகுதியில், மூன்றாவது சூரன் பானுகோபன் வதையும் நடந்தது. பின், உடுமலை ரோடு வழியாக சென்று தேர்நிலையம் பகுதியில், சூரபத்மன் வதை செய்யும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதையடுத்து கடந்த ஆறு நாட்களாக சஷ்டி விரதம் மேற்கொண்டு வந்த பக்தர்கள், பழங்கள் உண்டு விரதத்தை முடித்தனர். தொடர்ந்து இன்று (30ம் தேதி) காலை 10:00 மணிக்கு மகா அபிேஷகம், மாலை 6:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும், 31ம் தேதி மாலை 6:00 மணிக்கு திரு ஊஞ்சல் உற்சவ பூர்த்தி நிகழ்ச்சியும் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திட்டக்குடி: மாசி மாத கடைசி சனிக்கிழமையொட்டி, பெண்ணாடம் அடுத்த புத்தேரி வரதராஜ பெருமாள் கோவிலில் கோ ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், 58வது ஜெயந்தி ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி தெப்பக்குளத்தில், தெப்பத்தேர் வைபவம் நடந்தது.பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் ... மேலும்
 
temple news
திருவள்ளூர்: திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம், நேற்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
வில்லியனுார்: வில்லியனுார்பெருமாள் கோவிலில், தங்கத் தேர் செய்வதற்கான முதல் தவணை காசோலையை கும்பகோணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar