Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

சேலம் முருகன் கோவில்களில் சூரசம்ஹார ... பகவதி அம்மன் அன்னதான உணடியல் மூலம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வயலூர் முருகன் கோவிலில் சூரசம்ஹாரம் கோலாகலம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 அக்
2014
03:10

திருச்சி: திருச்சி, குமார வயலூர் முத்துக்குமார ஸ்வாமி கோவிலில், கந்தசஷ்டி விழாவையொட்டி, நேற்று காலை, சூரசம்ஹாரத்துக்கு வேல் வழங்கும் நிகழ்ச்சியும், மாலையில், சூரசம்ஹாரமும் நடந்தது. தமிழகத்தில், ஆறுபடை வீடுகளுக்கு அடுத்தபடியாக, பிரசித்தி பெற்ற முருகன் கோவில்களில், திருச்சியை அடுத்து குமார வயலூரில் உள்ள முத்துக்குமார ஸ்வாமி கோவிலும் ஒன்று.

இக்கோவிலில், இந்த ஆண்டு கந்தசஷ்டி விழா, கடந்த, 24ம் தேதி காப்புக்கட்டுதலுடன் துவங்கியது. அன்று முதல், தினமும் காலையில் லட்சார்ச்சனை, ஷண்முகார்ச்சனை, இரவு சிறப்பு வாகனங்களில் சிங்காரவேலர் வீதியுலா நடந்தது. கடந்த, 27ம் தேதி, முருகன் அன்னவாகனத்தில் எழுந்தருளி, யானை முக சூரனுக்கு முக்தியளித்தார். நேற்று முன்தினம், வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளி, சிங்கமுக சூரனை வதம் செய்தார். விழாவில், முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம், நேற்று இரவு நடந்தது. சூரனை சம்ஹாரம் செய்வதற்காக, நேற்று காலை, 10 மணிக்கு, வயலூர் கோவில் ஆதிநாயகி அம்மன் அலங்கரிக்கப்பட்ட பல்லாக்கில், சக்திவேலுடன் கோவில் முன் எழுந்தருளினார். தொடர்ந்து, உற்சவர் முருகன் பல்லாக்கில், கோவிலை வலம் வந்து, ஆதி நாயகி அம்மனிடம், வேல் வாங்கும் நிகழ்ச்சி நடந்தது. சக்திவேலை பெற்றுக்கொண்ட முருகப்பெருமான், இரவு, 7.30 மணிக்கு, ஆட்டுக்கடா வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து, அரோகரா கோஷம் முழங்க, சூரபத்மனை வதம் செய்து, மோட்சம் அளித்தார். நிகழ்ச்சியில், திருச்சி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, ஸ்வாமி தரிசனம் செய்தனர். கந்த சஷ்டி விழாவில், சூரசம்ஹாரம் நிகழ்ச்சியை முன்னிட்டு, அரசு போக்குவரத்து கழகம் சார்பில், திருச்சியிலிருந்து, வயலூருக்கு கூடுதல் பஸ்கள் இயக்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்திரமேரூர்: பெருநகர், பிரம்ம புரீஸ்வரர் கோவிலில் தைப்பூச விழாவையொட்டி, 63 நாயன் மார்கள் உத்சவம் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச திருவிழாவையொட்டி, திருக்கல்யாணம் உற்சவம் ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், திரூர் அருகே திருநாவாயா நாவாமுகுந்தர் கோவில் மஹாமக ... மேலும்
 
temple news
பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பெரியநாயகி அம்மன் கோயிலில் ... மேலும்
 
temple news
சிவகங்கை: காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர், சொர்ணவல்லி அம்பாள் கோயில் தைப்பூச விழா தேரோட்டம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar