Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில்.. ... அவிநாசியில் உருவாக்கப்பட்ட 40 டன் எடையில் நந்தி சிலை! அவிநாசியில் உருவாக்கப்பட்ட 40 டன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பகவான் ஸ்ரீ சத்யசாய் பாபா 89வது பிறந்த நாள் விழா
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

17 நவ
2014
12:11

சென்னை; பகவான் ஸ்ரீ சத்யசாய் பாபாவின், 89வது பிறந்த நாள் விழா கொண்டாட்டம், நேற்று, கொடியேற்றத்துடன் துவங்கியது. வரும், 23ம் தேதி, பகவான் சத்யசாய் பாபாவின், 89வது பிறந்த நாள் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, நேற்று ஆர்.ஏ.புரம் சுந்தரத்தில், நேற்று காலை, 6:00 மணிக்கு, கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. தொடர்ந்து, சிறப்பு அபிஷேகம், அலங்காரத்துடன், பாபா உருவப்படத்துடன், பஜனை பாடல்கள், மேள தாளத்துடன் ஊர்வலம் நடைபெற்றது. கடந்த 2007ம் ஆண்டு, சென்னைக்கு கிருஷ்ணா நதி நீர் எடுத்து வரும் திட்டத்தை, பாபா துவங்கியதை, நினைவுகூரும் விதமாக, மாலை 4:30 மணிக்கு, சாய் இளைஞர்கள் 100 பேர், நீர்வரத்து பகுதியான ஊத்துக்கோட்டையில், மோட்டார் சைக்கிள் பேரணியை துவக்கி, கங்கா நீரை எடுத்து, சுந்தரம் வந்து சேர்ந்தனர். பேரணியில், பாபா வின், வார்த்தைகள், மக்களை சென்று சேரும் விதமாக, ”துதிக்கும் உதடுகளை விட சேவை செய்யும் கரங்கள் புனிதமானவை, எல்லோரை யும் நேசியுங்கள், எல்லோருக்கும் தொண்டு செய்யுங்கள். நல்லதை செய், நல்லதை பார், நல்லவனாக இரு, இதுவே இறைவனை அடையும் வழி,” ஆகிய வாசகங்கள் அடங்கி

பதாகையுடன் பேரணி நடந்தது. தொடர்ந்து, பக்தி பாடல்கள், பஜனை, பிரசாதம் வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவையொட்டி, வரும், 22ம் தேதி வரை, காலை 6:00 மணிக்கு, நாதஸ்வரம், 7:00 மணிக்கு, அபிஷேகம், 10:30 மணிக்கு, அர்ச்சனை, 12:00 மணிக்கு, அன்னதானம், மாலை 4:30 மணிக்கு, வேதபாராயணம், மாலை 5:00 மணிக்கு, பக்தி பாடல்கள், இரவு 7:00 மணிக்கு, பிரசாதம் வழங்குதல் உள்ளிட்டவை நடக்கின்றன. வரும், 23ம் தேதி, ஸ்ரீ சத்யசாய் பாபா பிறந்த நாள் தினத்தன்று, அதிகாலை 5:00 மணிக்கு, ஓம்காரம் சுப்ரபாதம், 5:30 மணிக்கு, ஊர்வலம், 6:30 மணிக்கு, கொடி, 7:00 மணிக்கு, ஹோமம், கங்கா புனிதா நீரால் சுந்த ரேஸ்வரர், சிர்டி சாய் பாபாவுக்கு அபிஷேகம், 8:00 மணிக்கு, வேதபாராயணம், பஜனை, 10:30 மணிக்கு, அர்ச்சனை, மதியம் 12:00 மணிக்கு, துணி வழங்குதல், அன்ன தானம், மாலை 5:00 மணிக்கு, பக்தி பாடல், இரவு 6:00 மணிக்கு, பஜனை, 7:00 மணிக்கு, மகாமங்கள ஆரத்தி, பிரசாதம் வழங்குதல் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம், யாக சாலை பூஜையுடன் இன்று துவங்குகிறது.கடலுார் ... மேலும்
 
temple news
வடமதுரை: வடமதுரை காளியம்மன் கோயில் திரு விழாவில் சவுந்தரராஜப் பெருமாள் சீர் வழங்கும் நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூர், காலடிபேட்டை, கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் ஹம்ச வாகனத்தில் கோதண்டராமர் ... மேலும்
 
temple news
மதுரா; ஜனாதிபதி திரௌபதி முர்மு, மதுராவில் உள்ள டங்கடி கோவிலில் தரிசனம் செய்தார்.ஜனாதிபதி திரௌபதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் ஒன்பதாம் நாளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar