Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அவிநாசியில் உருவாக்கப்பட்ட 40 டன் ... ஆண்டாள் கோயிலுக்கு பூச்சக்கர குடைகள் உபயம்! ஆண்டாள் கோயிலுக்கு பூச்சக்கர ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வீரராகவப் பெருமாள் கோவிலில் சுவாமி விக்ரகங்களுக்கு தான்ய வாசம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

17 நவ
2014
12:11

திருப்பூர் : திருப்பூர் ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோவிலில், புதிய விக்ரகங்களுக்கு தான்ய வாசம் செய்யும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. திருப்பூர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோவில் கும்பாபிஷேகம், வரும் டிச., 1ல் நடக்கிறது. சுற்றுப்பிரகாரத்தில் ஸ்ரீசக்கரத்தாழ்வார், ஸ்ரீலட்சுமி நரசிம்மர், ஸ்ரீஹயக்கிரீவர், ஸ்ரீதன்வந்திரி சன்னதிகள், புதியதாக அமைக்கப்பட்டுள்ளன. இந்த சன்னதிகளில் பிரதிஷ்டை செய்வதற்காக, புதிதாக சுவாமி விக்ரகங்கள் வடிவமைக்கப்பட்டன. அதேபோல், பொய்கையாழ்வார், பூத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசையாழ்வார், மதுரகவியாழ்வார், குலசேகர ஆழ்வார், தொண்டரடிப்பொடியாழ்வார் ஆகிய ஏழு பேரின் சிலைகள் செய்யப்பட்டுள்ளன. புதிய விக்ரகங்கள் நீர், தானியம், பூக்களில் வைக்கப்பட்ட பிறகு, கும்பாபிஷேகம் செய்து, பிரதிஷ்டை செய்ய வேண்டும்.அதன்படி, சுவாமி விக்ரகங்கள் மற்றும் ஆழ்வார் விக்ரகங்கள், கடந்த 9ம் தேதி ஜலாதி வாசம் என்படும் நீருக்குள் ஒரு வாரம் வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. இது, நிறைவடைந்ததை அடுத்து, நேற்று தான்ய வாசம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி, எம்பெருமான் மற்றும் தாயார்களுக்கு சிறப்பு திருமஞ்சனம், பூஜைகள் நடந்தன. அதன்பின், தானியங்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, சிலைகள் மீது தூவப்பட்டன. இதில், திருப்பணிக்குழுவினர் மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர்.வரும் 23ம் தேதியில் இருந்து ஒரு வாரம், சுவாமி சிலைகளுக்கு புஷ்பவாசம் செய்யப்படும். வரும் 27ல், முளைப்பாலிகை, தீர்த்தக்குட ஊர்வலமும்; 28ம் தேதி மாலை 5.00 மணிக்கு, கும்பாபிஷேக யாக சாலை பூஜைகளும் துவங்குகின்றன. டிச., 1ம் தேதி காலை, கும்பாபிஷேகம் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆடிப்பூரம் என்னும் விழா ஆடி மாதத்திலே பூர நட்சத்திரம் உச்சத்தில் இருக்கும் போது கொண்டாடப்படுவது. இது ... மேலும்
 
temple news
அரியலூர்: முதலாம் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட புகழ்பெற்ற கங்கை கொண்ட சோழீசுவரர் கோவிலில் பிரதமர் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; ஆடிப்பூர உற்சவத்தை முன்னிட்டு திருக்கடையூர், சீர்காழி கோவில்களில் தேரோட்டம் நடைபெற்றது. ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில், ஆடிக் குண்டம் திருவிழா கொடியேற்றம் ... மேலும்
 
temple news
 குன்றத்துார்; ஆடி பூரத்தை முன்னிட்டு, மாங்காடு காமாட்சி அம்மனுக்கு நாளை 1008 கலச அபிஷேகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar