வாய்விட்டுச் சொல்வதை விட, மனதிற்குள் சொல்வது தான் சிறப்பு. எங்கெங்கோ அலை பாய்ந்து கொண்டுஇருக்க விட்டுக் கொண்டு மவுனமாக ஸ்தோத்திரம் சொல்வதை விட, வாய்விட்டுச் சொல்வதன் மூலம் அதன் சப்தத்தில் மனதை குவிய வைப்பது எளிது. தியானம் பயில்பவர்கள் மனதிற்குள் சொல்லிக் கொள்ள முயற்சிக்கலாம். எப்படி சொன்னாலும், பக்தியுடன் சொல்வதை இறைவன் ஏற்றுக் கொள்வான் என்பதே உண்மை.