விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் கடந்த சனிக்கிழமை நடந்த அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் லட்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் கடந்த சனிக்கிழமை இரவு அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடந்தது.அன்று காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து வெள்ளி காப்பு அலங்காரம் செய்தனர். அதிகாலை முதல் ஆயிரக்கணக்கானவர்கள் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.இரவு 11.40 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் துவங்கி நள்ளிரவு ஒரு மணி வரை நடந்தது. உற்சவத்தில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார். அப்போது கோவில் பூசாரிகளும், பக்தர்களும் அம்மன் பக்தி பாடல்களையும், தாலாட்டு பாடல்களும் பாடினர். ஏராளமானவர்கள் சாமி வந்து ஆடினர்.இதில் தென்சென்னை எம்.பி., விஜயகுமார், விழுப்புரம் ஆர்.டி.ஓ., அனுசுயா தேவி உட்பட லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.இந்து சமாய அறநிலையத்துறை உதவி ஆணையர் பிரகாஷ், அறங்காவலர் தலைவர் சரவணன் மற்றும் அறங்காவலர்கள், விழா ஏற்பாடுகளை செய்தனர். செஞ்சி டி.எஸ்.பி., முரளிதரன் தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தமிழகத்தின் பல பகுதியில் இருந்து சிறப்பு பஸ்களை இயக்கினர்.