Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விக்ரகங்களுக்கு புஷ்பாதி வாசம்; ... சனிப்பெயர்ச்சி விழாவிற்கு பந்தல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அமலோற்பவ அன்னை ஆலய 113ம் ஆண்டு விழா 28ல் துவக்கம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

24 நவ
2014
11:11

பெங்களூரு:ரயில்வே காலனி, அமலோற்பவ அன்னை ஆலய, 113வது ஆண்டு திருவிழா வரும், 28ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.பெங்களூரு, மெஜஸ்டிக் ரயில் நிலையம் பின்புறம், ரயில்வே காலனி உள்ளது. இங்குள்ள அமலோற்பவ அன்னை ஆலய, 113வது ஆண்டு திருவிழா, வரும், 28ம் தேதி துவங்குகிறது.

அன்று மாலை, 6:00 மணிக்கு, முதன்மை வட்டார குரு அருட்தந்தை ஜோசப் சூசைநாதன், கொடியேற்றி பிரசங்கம் செய்கிறார். கன்னடத்தில், அருட்தந்தை சில்வஸ்டர் அந்தோணி திருப்பலி மறையுரை ஆற்றுகிறார்.

நற்கருணை பவனி:நவநாட்களான, வரும், 29ம் தேதி முதல் டிசம்பர், 6ம் தேதி வரை தினமும் மாலை, 6:00 மணிக்கு, நவநாள் திருப்பலிக்கு பின், ஜெபமாலை பவனி, திவ்ய நற்கருணை ஆசிர் நடக்கிறது.வரும், 30ம் தேதி மாலை, ரயில்வே மைதானத்திலிருந்து திவ்ய நற்கருணை பவனி நடக்கிறது. தொடர்ந்து, ஆங்கிலத்தில் திருப்பலி நடக்கிறது.

திருச்சி அருட்தந்தை ஆரோக்கியராஜ் ஆங்கிலத்திலும், அருட்தந்தை சில்வஸ்டர் அந்தோணி கன்னடத்திலும் மறையுரையாற்றுகின்றனர். நவ., 29, 30, டிசம்பரில் தமிழிலும், டிச., 2, 3, 4ல் ஆங்கிலத்திலும், டிச., 5ல் கன்னடத்திலும், திருப்பலிகள் நடக்கும்.

டிச., 5ம் தேதி இரவு, 10:00 மணி முதல் மறுநாள் காலை, 5:00 மணி வரை அருட்தந்தை யூஜின் டோனி மற்றும் பங்கு ஜெப குழுவினரால், இரவு ஆராதனை நடத்தப்படுகிறது.டிச., 6ம் தேதி, மாலை, 6:00 மணிக்கு, புதுப்பிக்கப்பட்ட ஆலயம், பலி பீடத்தை பெங்களூரு உயர்மறை மாவட்ட பேராயர் பெர்னார்ட் மோரஸ், புனிதப்படுத்தி திருப்பலி நிறைவேற்றுகிறார்.

கொடி இறக்கம்:திருவிழா நாளான, டிச., 7ம் தேதி கன்னடம், தமிழ், ஆங்கிலம், மலையாளத்தில் திருப்பலிகள் நடக்கின்றன. மாலை, 6:00 மணிக்கு, புதுப்பிக்கப்பட்ட ஆலய வளாகத்தில், பெங்களூரு உயர்மறை மாவட்ட முதன்மை குரு ஜெயநாதன் மற்றும் ஏனைய குருக்களுடன் திருப்பலி நடக்கிறது. அன்று, தேர் பவனியும் நடக்தப்படுகிறது. பின், ஆலய வளாகத்தில் திவ்ய நற்கருணை ஆசிருக்கு பின்னர், கொடி இறக்கப்படுகிறது.

விழா ஏற்பாடுகளை, ஆலய பங்கு தந்தை ஜான் சாலமோன் தலைமையில், பங்கு பக்தர்கள் செய்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விழுப்புரம்,: விழுப்புரத்தில் உள்ள சிவாலயங்களில் குரு பெயர்ச்சியை யொட்டி குரு பகவானுக்கு சிறப்பு ... மேலும்
 
temple news
கொடைக்கானல், கொடைக்கானல் நாயுடுபுரம் டிப்போ பத்ரகாளி அம்மன் கோயிலில் குரு பெயர்ச்சி விழா நடந்தது. ... மேலும்
 
temple news
திருவெண்ணெய்நல்லுார், : திருவெண்ணெய்நல்லுார் அருகே உள்ள ஞானகுரு தட்சணாமூர்த்தி குரு பீடத்தில் குரு ... மேலும்
 
temple news
ஓசூர்; கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்த சானமாவு அருகே டி.கொத்தப்பள்ளியில் திரவுபதி தர்மராஜ சுவாமி ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வசந்த உற்ஸவ திருவிழா மே 13ல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar