Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மதுரைக்கு வரும் ஐயப்ப பக்தர்கள் ... கோயில்களில் பிறந்த நட்சத்திரத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சமய ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டு!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

29 நவ
2014
12:11

திருப்பூர்: விசாலாட்சி உடனமர் விஸ்வேஸ்வர சுவாமி மற்றும் ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோவில்களில், ஆண்டுதோறும் வைகாசி விசாகத் தேர்த்திருவிழா சிறப்பாக நடந்து வருகிறது. அரியும், சிவனும் ஒன்று என்ற சமய உணர்வு கொங்கு நாட்டில் போற்றப்பட்டது. அதேபோல், திருப்பூரில் ஈஸ்வரன் மற்றும் பெருமாள் கோவில்கள் அருகருகே அமைந்துள்ளதோடு, கோவில்களுக்கு ஊழியத்துக்கு வழங்கப்பட்ட நிலங்களும் ஒன்றாக உள்ளதும், திருப்பூர் மக்களின் சமய ஒற்றுமையை காட்டுகிறது. ஆண்டு திருவிழாவாக விமரிசையாக கொண்டாடப்படும் தேர்த்திருவிழாவும் இங்கு ஒன்றாகவே நடத்தப்படுகிறது. முந்தைய நாள் விஸ்வேஸ்வரர் கோவில் தேரோட்டமும், மறுநாள் ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோவில் தேரோட்டமும் நடக்கிறது. விழா துவக்கமாக, திருப்பூரின் காவல் தெய்வமான செல்லாண்டியம்மன் கோவிலில் துவங்கி, கிராம சாந்தி,

அம்மன் திருவீதி உலா நடத்தப்படுகிறது. இரு கோவில்களிலும் கொடியேற்றம் ஒரே நேரத்தில் நடக்கிறது. விசாக நட்சத்திரத்தில் ஈஸ்வரன் கோவில் தேரோட்டமும், அனுஷம் நட்சத்திரத்தில் பெருமாள் கோவில் தேரோட்டமும் நடக்கிறது. பழங்காலத்தில், காலையில் ஈஸ்வரன் தேரோட்டமும், மாலையில் பெருமாள் தேரோட்டமும் நடந்துள்ளது. பிற்காலத்தில், அடுத்தடுத்த நாட்களுக்கு மாறியுள்ளது. இத்தேர்களில் அற்புதமான சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. மனித வாழ்வியலையும், சுவாமிகளின் திருக்கோலங்களும் காட்சியாக செதுக்கப்பட்டுள்ளன. இரண்டு குதிரைகள் பூட்டிய தேராக அமைந்துள்ளது. தேர்களில் உள்ள சிற்பங்கள், தேர் அமைக்கப்பட்டுள்ள வடிவம் ஆகியவற்றைக் கொண்டு, இரண்டு கோவில்களின் பழமையை உணர முடியும். அந்தளவுக்கு அற்புதமான சிற்ப வேலைப்பாடுகளை கொண்ட தேர்களாகும்.

இரண்டு தேர்களுக்கு முன்பும், சிறிய தேரில் விநாயகர் எழுந்தருள்வதும், பெண்கள் மற்றும் குழந்தைகள் இழுத்துச் செல்வதும் சிறப்பானது.அந்தக்காலத்தில் நகரை சுற்றிலும் உள்ள நூற்றுக்கணக்கான மக்கள் பங்கேற்று தேர் இழுத்து, வழிபட்டுள்ளனர். மிகப்பிரமாண்டமாக, மாட்டுத்தாவணி எனப்படும் மாட்டுச்சந்தை நடந்துள்ளது. ஆயிரக்கணக்கான மாடு, குதிரை உள்ளிட்ட கால்நடைகள் விற்பனைக்கு வந்துள்ளன. திருவிழா கடைகள், பொழுதுபோக்கு அம்சங்கள், தற்போதுள்ள பழைய பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் நடந்துள்ளன. சைவமும், வைணவமும் இணைந்த கோவிலாக இருப்பதோடு, வைகாசி விசாகத்தேர்த்திருவிழா ஒற்றுமையை பறைசாற்றும் விதமாக நடத்தப்படுகிறது. இத்தகைய சிறப்பு பெற்ற ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோவில் கும்பாபிஷேகம், வரும் டிச., 1ல் கோலாகலமாக நடைபெற உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்,  காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை அத்திவரதர் குளத்தில் ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் இன்று பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.திருத்தணி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் மாசி பிரம்மோத்சவ விழா, இன்று காலை கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
தூத்துக்குடி; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசி திருவிழா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ... மேலும்
 
temple news
திருவொற்றியூர்; தியாகராஜ சுவாமி கோவிலில், மாசி பிரமோத்சவ பெருவிழா நாளை கொடியேற்றத்துடன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar