திருவண்ணாமலையில் ஜோதி ரூபத்தில் பெருமாள் சொர்க்கவாசல் கடக்கிறார். சிவன் சந்நிதிக்கு பின்புறம் வேணுகோபாலர் சந்நிதி உள்ளது. வைகுண்ட ஏகாதசியன்று இவரது சந்நிதியில் ஒரு தீபம் ஏற்றி பூஜிக்கின்றனர். அதன்பின்பு, அத்தீபத்தை பெருமாளாகக் கருதி பிரகாரத்திலுள்ள வைகுண்ட வாசல் வழியே கொண்டு வருவர். பஞ்சபூத தலங்களில் இது அக்னி தலம் என்பதால், பெருமாளும் தீப வடிவில் எழுந்தருள்கிறார்.