ஈரோடு அருகே கொடுமுடி மகுடேஸ்வரர் கோயிலில் மிகப் பழைமையான வன்னிமரம் உள்ளது. இது பூ பூக்கும், ஆனால் காய் காய்க்காது. ஒரு பக்கம் முள் இருக்கும் மறுபக்கம் முள் இருக்காது. இதன் இலையை தண்ணீரில் போட்டால் எவ்வளவு நாள் ஆனாலும் தண்ணீர் கெடாது. பழனி பங்குனி உத்திரத் திருவிழாவுக்குத் தீர்த்தக் காவடி எடுத்துச் செல்லும் போது, காவிரி தீர்த்தத்தில் இம்மர இலைகளைப் போட்டுத்தான் எடுத்துச் செல்வார்கள்.