ஈரோடு மாவட்டம், சத்திய மங்கலம் வேணுகோபால சுவாமி கோயிலில் ஒரே கல்லால் ஆன பிரம்மாண்ட துவஜஸ்தம்பம் உள்ளது. இது தரைக்குமேல் சுமார் 80 அடியும், பூமிக்கடியில் சுமார் 40 அடியும் உள்ளது. இதன் ஒரு பகுதியில் 6 அடி உயரத்தில் ஆஞ்சநேயர் கம்பீரமாக நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார்.