Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஆந்திர சின்ன ஜீயர் சொற்பொழிவு! திருவண்ணாமலைக்கு அரசு சிறப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
டிசம்பர் 18 முதல் சென்னையில் திருவையாறு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 டிச
2014
12:12

சென்னை: கலைத்துறையில் சேவையாற்றி வரும் ”லஷ்மன் ஸ்ருதி மியுசிக்கல்ஸ்” நிறுவனம் சென்னையில் திருவையாறு இசை விழாவை வருடந்தோறும் டிசம்பர் 18 முதல் 25 வரை சென்னை காமராஜர் அரங்கத்தில் கொண்டாடி வருகிறது. இவ்வாண்டு இந்த இசைவிழாவிற்கு வயது பத்து. ஓர் அற்புத இசைச் சங்கமமான ”சென்னையில் திருவையாறு” இவ்வருடம் வருகிற டிசம்பர் 18ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு திருவிழா ஜெய்சங்கரின் நாதஸ்வர இசை நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது. மாலை 5 மணிக்கு பி.எ.ஸ்.நாராயணசாமி தலைமையில் 500 க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பஞ்சரத்ன கீர்த்தனைகளை ஒன்றாக சேர்ந்து பாடுகின்றனர். தொடர்ந்து மாலை 6 மணிக்கு முன்னாள் குடியரசுத்தலைவர் ஏபிஜெ அப்துல்கலாம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி இசை விழாவை தொடங்கி வைக்கின்றார். இரவு 7.30 மணிக்கு வயலின் கலைஞர்கள் கணேஷ் குமரேஷ் இருவரது வயலின் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

19ம் தேதி முதல் தினமும் ஏழு நிகழ்ச்சிகள் நடைபெறும். காலை 7.00 மணிக்கு துவங்கி இரவு 10.00 மணி வரை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. சென்னையில் திருவையாறு நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒளிப்பதிவு செய்யப்பட்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காமராஜர் அரங்கத்தில் திருவையாறு தியாகராஜர் ஆராதனை மண்டபத்தை நம் கண்முன்னே கொண்டுவரும் வகையில் பிரம்மாண்டமான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

18/12/14: மாலை 3 மணி: திருவிழா ஜெய்சங்கர்- நாதஸ்வரம்; மாலை 5 மணி: பிஎஸ்.நராராயணசாமி தலைமையில் பஞ்சரத்ன கீர்த்தனைகள்; மாலை 6 மணி: சென்னையில் திருவையாறு 10வது ஆண்டு இசைவிழாவை முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைக்கிறார். இரவு 07:30 மணிக்கு கணேஷ் குமரேஷ்- வயலின்.

19/12/14: காலை 7 மணி: உடையாளூர் கல்யாணராமன்- நாமசங்கீர்த்தனம்; 9 மணி: நர்மதா- வயலின்; 10:30 மணி: ஷோபனா ரமேஷ்- பரதநாட்டியம்; மதியம் 1 மணி: சங்கரி கிருஷ்ணன்- வாய்பாட்டு; 02:45 மணி: கர்நாட்டிகா சகோதரர்கள் மற்றும் துஷ்யந்த் ஸ்ரீதர்- சங்கீத உபன்யாசம் ( சீனிவாச கல்யாணம்); மாலை 04:45 மணி: ப்ரியா சகோதரிகள்- வாய்பாட்டு; இரவு 07:30 மணி: ராஜேஷ் வைத்யா- வீணை.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தூத்துக்குடி; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்த சஷ்டிவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான  ... மேலும்
 
temple news
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், கந்தசஷ்டி மற்றும் வார விடுமுறை என்பதால், ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
கஷ்யப முனிவருக்கும் மாயைக்கும் பிறந்த பிள்ளைகள் சூரபத்மன், சிங்கமுகன், தாரகன். இவர்களுக்கு ஆயிரம் ... மேலும்
 
temple news
 நாகப்பட்டினம்: நாகை அடுத்த சிக்கலில், அறுபடை வீடுகளுக்கு இணையான சிங்காரவேலவர் கோவில் உள்ளது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar