Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news பழநியில் "அரோகரா கோஷத்துடன் ஒளி ... பாலமுருகனுக்கு விபூதி அலங்காரம்! பாலமுருகனுக்கு விபூதி அலங்காரம்!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கார்த்திகை தீப திருநாள் கோவிலில் சிறப்பு பூஜை!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

06 டிச
2014
12:12

திருப்பூர்: கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு, கோவில்களில் சிறப்பு பூஜை செய்யப்பட்டன; தீபங்கள் ஏற்றப்பட்டன. கார்த்திகை தீப திருநாள், திருப்பூர் கோவில்களில் நேற்று கொண்டாடப்பட்டது. கொங்கணகிரி கந்த பெருமான் கோவிலில், சுப்ரமணியருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, தீபஸ்தம்பத்தில் கார்த்திகை விளக்கு ஏற்றப்பட்டது. விஸ்வேஸ்வரர் கோவிலில், மூலவர், விசாலாட்சியம்மன், சுப்ரமணியருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, சொக்கப்பனை கொளுத்தப்பட்டு, பக்தர்கள் வழிபட்டனர். கோவில் கொடி மரம் முன் பெரிய தீபம் ஏற்றப்பட்டது. பெண்கள் தீபங்கள் ஏற்றி வழிபட்டனர்.

கோட்டை மாரியம்மன் கோவில், போலீஸ் லைன் மாரியம்மன் கோவில், செல்லாண்டியம்மன் கோவில் உள்ளிட்ட அனைத்து கோவில்களிலும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. தீபஸ்தம்பம் மற்றும் சொக்கப்பனை கொளுத்தப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோவிலில் நேற்று சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, வள்ளி, தெய்வானையுடன் சுப்ரமணியம் சப்பரத்துக்கு எழுந்தருளினார். வீதி உலா முடிந்ததும், கோவிலில் தீபங்கள் ஏற்றி பக்தர்கள் வழிபட்டனர். திருக்கார்த்திகையை முன்னிட்டு, கோவில்களில் நேற்று காலை முதலே பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது. வீடுகள், நிறுவனங்களிலும் பொதுமக்கள் கோலமிட்டு, தீபங்கள் ஏற்றி வழிபட்டனர்.

அவிநாசி: அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் விசேஷ பூஜை, வழிபாடுகள் நடந்தன. அவிநாசியப்பர், கருணாம்பிகை அம்மன், சுப்ரமணியர் சன்னதிகளில் சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடுகள் நடந்தன. மயில் வாகனத்தில் சுப்ரமணியரும், ரிஷப வாகனத்தில் சந்திரசேகரரும் சிறப்பு அலங்காரத்தில், தீப ஸ்தம்பம் முன் எழுந்தருளினர். வேத பாராயணத்துக்கு பின், கோவில் முன்புள்ள 75 அடி உயர தீப ஸ்தம்பத்தில், திருக்கோடி தீபம் ஏற்றப்பட்டது. பக்தர்கள், "அண்ணாமலையாருக்கு அரோகரா என கோஷமிட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் உள்ள முருகன் சன்னிதியில் தை கிருத்திகை ... மேலும்
 
temple news
 சிதம்பரம்: குடியரசு தின விழாவையொட்டி,சிதம்பரம் நடராஜர் கோவில் கிழக்கு கோபுரத்தில் பொது ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரியில் நாட்டார்கள் காவடிக்கு பொது மக்கள் சார்பில் வரவேற்பு ... மேலும்
 
temple news
 பழநி; பழநி முருகன் கோயில் தைப்பூச விழா பெரியநாயகி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்கியது. இதன் ... மேலும்
 
temple news
அவிநாசி: ரதசப்தமி விழாவையொட்டி, அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில், ஸ்ரீ ஆனந்தவல்லி தாயார், ஸ்ரீ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar