Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பதி திருமலையில் தரிசிக்க 14 மணி ... புனித சவேரியார் ஆலய தேர்பவனி ஏராளமானோர் பங்கேற்பு புனித சவேரியார் ஆலய தேர்பவனி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சேனைக்கல்ராயன் பெருமாள் கோவிலில் மகா விஷ்ணு தீபம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 டிச
2014
11:12

ஆனைமலை: ஆனைமலை சேனைக்கல்ராயன் பெருமாள் கோவிலில் கார்த்திகை மாத மகா விஷ்ணு தீபம்  ஏற்றப்பட்டது. ஆனைமலையின் ÷ மற்குப்பகுதியில், குன்றின் மீது ஆயிரத்து 500 அடி உயரத்தில், சேனைக்கல்ராயன் பெருமாள் கோவில் உள்ளது. ஆண்டுதோறும் கார்த்திகை  மாதத்தில் விஷ்ணு தீபம் ஏற்றப்படும்.

Default Image
Next News

இந்தாண்டு மகா விஷ்ணுதீபம் நேற்றுமுன்தினம் மாலை 4.30 மணிக்கு, சுதர்சன ஆழ்வாருக்கு யாகம்  வளர்க்கப்பட்டு, 5.00 மணிக்கு கிரிவலம் வந்து, 6.00 மணிக்கு  மூலவருக்கு தீபாராதனை காட்டி பெரிய அகல் (திருக்கோட்டி) தீபம் ஏற்றப்பட்டது.   அதைக்கொண்டு 20 அடி உயரம் கொண்ட கருட கம்பத்தின் மீது 6 அடி உயரம் கொண்ட கொப்பரையில் 400 கிலோ நெய்யினை ஊற்றி, 500 மீட்டர்  காடாதுணியில் செய்யப்பட்ட திரியை கொண்டு, ஹரே கோவிந்தா, என்ற பக்தர்களின் கோஷத்திற்கிடையே மகா விஷ்ணு தீபம் ஏற்றப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் ஐந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள்  பங்கேற்றனர். பக்தர்களுக்கு அன்னதானமும் நடந்தது. தொடர்ந்து ஐந்து நாட்கள்  எரியும் இந்த தீபத்தின் ஒளியினை, தெற்கே ஆழியாறு, மேற்கே மீனாட்சிபுரம், கிழக்கே அர்த்தநாரிபாளையம் கரியாஞ்செட்டிப்பாளையம், வடக்கே  கிணத்துகடவு தாலுகாவின் தெற்கு பகுதி வரை என 30 கி.மீ சுற்றுளவிற்கு தெரியும் என விழாக்குழுவினர் தெரிவித்தனர்.  

வால்பாறை: வால்பாறை நகர் நகை கடைவீதியை பல்வேறு மதங்களை சேர்ந்த மக்கள் கடை நடத்தி வருகின்றனர். இவர்கள் அனைவரும் ஒரு ங்கிணைந்து ஆண்டு தோறும் சமத்துவத்தை உணர்த்தும் வகையில் கார்த்திகை தீபத்திருநாளன்று கடை வீதி முழுவதும் 1,008 தீபம் ஏற்றி  இறைவனை வழிபடுகின்றனர். இந்த ஆண்டு கார்த்திகை தீபத்திருநாளையொட்டி நேற்றுமுன்தினம் இரவு 1,008 தீபம் ஏற்றி சுவாமியை  வழிபட்டனர்.  வியாபாரிகள் நடத்திய இந்த தீபவழிபாட்டில் நகை கடை வீதி முழுவதும் தீபஒளியால் ஜொலித்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சுசீந்திரம்: திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலில் நடைபெற்ற நவராத்திரி விழாவிற்கு சென்றிருந்த ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலையில், புரட்டாசி மாத பவுர்ணமியையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் ... மேலும்
 
temple news
பண்ருட்டி; திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில், புரட்டாசி மாத ஏகதின பிரம்மோற்சவத்தில் உற்சவர் ... மேலும்
 
temple news
கோவை; பாரத தேசத்தின் பாதுகாப்பு மற்றும் பாரத மக்களின்  நலன்வேண்டி காரமடை அருகே உள்ள எல்லை ... மேலும்
 
temple news
திருவேற்காடு; திருவேற்காடு கருமாரியம்மன் கோவிலில், நிறைமணி காட்சி விழா துவங்கியது.திருவேற்காடு, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar