திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவில் சரவண பொய்கை குளத்தின் சுற்றுச்சுவரை, 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சீரமைக்கும் பணி துவங்கியது. திருப்போரூரில் புகழ்பெற்ற கோவிலாக கந்தசுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலை ஒட்டி, 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த சரவண பொய்கை குளம் உள்ளது. இக்குளத்தின் சுற்றுச்சுவரில் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டு, கீழே விழும் நிலை உருவானது. இதையடுத்து, பழைய சுற்றுச்சுவரை அகற்றிவிட்டு புதிய சுற்றுச்சுவர் கட்டுவது என, கோவில் நிர்வாகம் முடிவு செய்தது. 800 மீட்டர் நீளத்திற்கு, இரும்பு கிரில்லுடன் சுற்றுச்சுவர் அமைக்கப்படவுள்ளது. இப்பணிக்கு, 25 லட்சம் ரூபாய் செலவாகும் என, மதிப்பீடு செய்துள்ளனர். சுற்றுச்சுவர் கட்டுமான பணி, நேற்று துவங்கியது.