பதிவு செய்த நாள்
17
டிச
2014
02:12
மண்ணச்சநல்லூர்: மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருவெள்ளரை புண்டரீகாட்சப் பெருமாள் கோவிலில், கார்த்திகை மாத கடைசி ஞாயிறை முன்னிட்டு, லட்ச தீப வழிபாடு நடந்தது. ஆழ்வார்களால் மங்கள சாசனம் செய்யப்பட்டதும், 108 வைணவ தலங்களுள் ஒன்றாகவும் விளங்கும், திருவெள்ளரை புண்டரீகாட்சப் பெருமாள் கோவிலில், கார்த்திகை தீபத்திருவிழா முடிந்து, இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை லட்ச தீபம் ஏற்றப்படும். இந்த ஆண்டுக்கான லட்ச தீபத்தை, அமைச்சர் பூனாட்சி, அரசு தலைமை கொறடா மனோகரன் ஆகியோர் பலி பீடத்தின் முன் தீபம் ஏற்றி துவக்கி வைத்தனர். தொடர்ந்து, திருவெள்ளரை, காளவாய்ப்பட்டி, பூனாம்பாளையம், தீராம்பாளையம் உள்ளிட்ட சுற்று வட்டார கிராம மக்கள் கோவில் பிரகாரத்திலும், தாயார் சன்னதி முன்பும், கோவிலைச் சுற்றியும் தீபங்கள் ஏற்றி வழிபட்டனர்.